Monday, May 16, 2011

மூத்த தமிழனுக்கு...




தமிழில் முக்குளித்து
மந்திரமொழி உரைத்து

தமிழ்பெற்ற மூத்த மகன்
என்றிருந்தோம் உன்னை.

பதவிதனைத் துறந்து - தம்பி
உயர் குடித்த - பாசிச
வெறி பிடித்த - கயவர்
இருக்கை வேரறுத்து - வருவான்
என்றிருந்தாள் தமிழ் அன்னை..

கற்பைப் பறிகொடுத்து
கதறினாள் தமிழ்ப்பெண் இங்கே
பதவி வெறி பிடித்து
மதியது தறி கெட்டு
உணராமல் இருந்தாய் நீ அங்கே..

கால் மேல் கால் போட்டு
எக்காளம் தான் கொண்டு
இருக்காதே என்றுரைத்தோம்
அன்று - இன்றுன்
நரித்தோல் உரித்து
வஞ்சகந்தான் வெறுத்து
துாக்கி எறிந்துவிட்டனர்
உன்னவர் அங்கே...

இன்றுவந்த 'அவள்' ஒன்றும்
தேவதை இல்லைதான் எமக்கு - இனி
எம் மூக்கு போனாலும் சரி - உன்
சகுனம் பிழைத்தால் போதும்..

தமிழனைப்புதை்துவிட்டாய் - அவன்
கனவுகள் தூங்கவில்லை - புதைகுழிகளும்
கதை சொல்லும் - நாம் மீண்டோம்
என்று வரலாறுதான் சொல்லும்

ஆலமரத்திற்கு வித்திட்டிருக்கிறோம - அது
விருட்சமாய் வளர காவல் நிற்போம்
பின்னை அதை அழிக்க - இனி
யாராலும் முடியாது...

-மோனி..




No comments:

Post a Comment