Friday, February 25, 2011

The Motorcycle Diaries - வாழ்க்கைப் பயணங்கள்




 '​சே குவேரா'... பெயரை சொல்லும் போதே அதிரும் மறைந்த சரித்திரம். நினைவுகளில் வாழ்ந்து வரும், புரட்சி மற்றும் மக்கள் சக்தியின் அடையாளம். தன் வாழ்க்கையை மக்களுக்காக இழந்த உண்மையான கதாநாயகன். இதுவரை எழுந்து வீழந்த புரட்சிகளும் இனி எதிர்காலத்தில் வரவிருக்கும் புரட்சிகளுக்கும் ஒரு விடிவௌ்ளியாக இருக்கிறார். அவரது வாழக்கை சுவடுகள் பல புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது.

அஸ்தமாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தும் தன் சுயநலத்திற்காக வாழ்ககையை வாழாமல் ஏகாதிபத்தியத்தை அதுவும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் நாடு, உறவு, காதல் என்பவற்றைத் துறந்து கியூபா, கொங்கோ, பொலிவியா என்று பன்முக சமூக அமைப்பின் மக்களின் விலங்குகளை அவிழ்ததெறிய பாடுபட்ட ஒரு மாமனிதர். வருத்தமும், துரோகமும் பின்தொடர்நது வந்தாலும் தன் இலக்குகளிலிருந்து வழுவாமல் இருந்தார். ஆடம்பரத்தை வெறுத்தார். கியூபாவில் தனக்கு கொடுக்கப்ட்ட அமைச்சர் பதவியை துச்சமாக மதித்து தொழிலாளர்களுடன் தொழிலாளர்களாக நின்று மூட்டை தூக்கினார், வண்டில் இழுத்தார். தான் கொண்ட பொதுவுடைமை வாதத்திற்கு எடுத்துக்காட்டாக நின்றார். கொங்கோவில் சர்வாதிகார பிடியில் சிக்கிய மக்களின் அவலக்குரல் கேட்கவே தன் பதவியை தூாக்கி எறிந்து கொங்கோவிற்கு விரைந்தார். அவருடைய
"Hast La Vigi Oria Siembre" (ஒன்றில் மரணம் அல்லது வெற்றி) என்று முடியும் பிடல் கஸ்டுரோவுக்கான கடிதம் வரலாற்றின் மறக்கமுடியாத வார்த்தைகளும் தருணங்களும். அப்படிப்பட்ட சே குவேராவின் வாழ்க்கையில் புரட்சி பற்றிய சிந்தனையை வித்திட்டு ஒரு சாதாரணமானவனிலிருந்து ஆசீர்வதிக்கப்ப்ட்டவராக மாற்றியது மோட்டார் சைக்கிளில் அவர் சென்ற தென் அமெரிக்க பயணங்கள்.



அவருடைய The Motorcycle Diariesஜ வாசித்த எவனும் புதிதாய்ப் பிறப்பான். வாழ்ககையின் புதிய பரிமாணங்கள் அவன் முன் விரியும். அப்படி ஒரு உணர்வு வெளிப்பாடும் பொதுப்படையான நோக்கும் அந்த நூலில் இருக்கும்.  வாழ்ககையை வாழத்துடிக்கும் இரு இளைஞர்களின் வாழ்வோடான புரிதல்களின் சாராம்சமே இந்த பயணங்கள். இதை சே தனது குறிப்புக்களில் இவ்வாறு கூறுகிறார்.
"What we had in common - our restlessness, our impassioned spirits, and a love for the open road."

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொடரினை மையப்படுத்தி 2004ஆம் ஆண்டு வெளிவந்ததே இந்த திரைப்படம். 

அவரது மோட்டார் சைக்கிள் டயரியின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் வாசித்தேன். அதன் பின்னரே இந்தப் படத்தை பாரக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப்புத்தகத்தில் சே இயற்கையின் வர்ணணைகளோடு உணர்வுகளிற்கும் வர்ணம் தீட்டி தன் எண்ணங்களை அழகாக பிரதிபலித்திருப்பார்.

 இந்தப் படத்தை பார்ககச் செல்லும் போது என் எதிர்பார்ப்பை நிச்சயம் திருப்தி செய்யாது என்றே எண்ணிச் சென்றேன். அதற்கு முக்கிய காரணம் இதன் இயக்குனர் Walter Salles பெரிதும் பிரபலமில்லாதவர். அத்தோடு படம் முழுதும் அர்ஜென்டிய மொழியிலேயே எடுக்ப்பட்டிருக்கும். உபதலைப்புக்களையே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.

ஆனால் படத்தை பார்த்து அதிர்ந்துபோனேன் என்பதே உண்மை. அதை அணுஅணுவாக ரசித்தேன். சேயாக வரும் Gael Garcia Bernal மற்றும் அல்பெடர்டோவாக வரும் Rodrigo De La Seran அற்புதமாக நடித்திருந்தார்கள். ஒரு ஆவணப்படத்தை எதிர்பார்த்துச சென்றேன் ஒரு உயிர்ப்புள்ள படத்தை பார்த்து கண்ணீருடன் வெளியேறினேன்.

இந்தப்படத்தை பற்றி விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. உணர்வுபூர்வமான ஔிப்பதிவே இந்தப்படத்திற்கு மிகப்பெரிய சக்தி. ஆனால் நெஞ்சில் நீங்காத சில கட்டங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இருவரும் ஒரு வயதானர் ஒருவரின் வீட்டில் தங்க அனுமதி கேட்பார்கள். அப்போது அந்தக்கிழவன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க சே தான் ஒரு மருத்துவன் என்றும் அல்பெர்டோ தான் ஒரு இரசாயாணவியல் ஆராய்ச்சியாளர் என்று அறிமுகப்பப்படுத்த. கிழவன் தன் கழுத்தில் உள்ள கட்டியைக்காட்டி இது என்னவென்று கேட்க அல்பெர்டோ அந்தக் கிழவனை சமாதானப்படுத்தி வீட்டில் இடம் பெறும் பொருட்டு சாதாரண கட்டி என்று பொய் சொல்ல சே இல்லை அது புற்றுநோய்க் கட்டி என்று முகத்திற்கு நேரே சொல்வது அற்புதம்.

பின் வயதுபோன மூதாட்டிக்கு சே வைத்தியம் பார்க்கும் காட்சி ஒரு மென் கறுப்பு பின்னணியில் திரையாக்கப்பட்டிருக்கும். அதில் Gael பிரதிபலிக்கும் உணர்வுகளும் பின்னணியில் ஒலிக்கும் குரல் சொல்லும் சொற்களும் உண்மையில் கண்ணீரைத் தரும்.

சிலி எல்லையைக்கடக்கும் போது சே சந்திக்கும் இரு ஏழைக் கணவன் மனைவியரின் கதையும் அவர்கள் மேல் கொண்ட பரிதாபத்தால் தன்னிடம் அவருடைய காதலி தந்த இறுதிப்பணத்தைக் கூட தானம் செய்துவிட்டு வரும் காட்சிகள் அழகு. இவ்வாறு தொடரும் காட்சிகளில் உச்சக்கட்டம் தொழுநோய் மருத்துவமனையில் சேயின் காலகட்டங்கள்.



அந்த காட்சிகளில் பிரிதிபலிக்கப்படும் உணர்வுகள் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதவை. அதற்கு நீங்கள் கட்டாயம் இந்தப் படத்தை பாரகத்தான் வேண்டும். தயவுசெய்து பாருங்கள். அதிலும் தொழு நோய் மருத்துவமனையில் சேயின் இறுதி வார்த்ததைகளை தத்தரூபமாக நடித்து காட்டியிருப்பார்.

இறுதியாக படம் முடிந்த பின்னர் உண்மையாக சேவுடன் பயணம் செய்த அல்பெர்டோ வயதான தோற்றத்துடன் திரையில் தெரிவார். சேகுவேராவை பின் தொடரும் பலருக்கும் அந்த காட்சி நிச்சயம் நெஞ்சு உருகும்.

இந்தக் கட்டுரையில் சில முக்கியமான கட்டங்களை தவிர்த்தே எழுதியுள்ளேன். இது உங்களை இந்தப் படத்தை பாரக்க நிச்சயம் தூண்டும்.






மெல்லிய பின்னணி இசையுடன் பல வர்ண மக்களை கறுப்பு வௌ்ளை புகைப்படமாக காட்டி படம் முடியும். இந்தப் படத்தை பற்றி கூறுவதென்றால் சேகுவேரா தன் டயரிகளில் எழுதிய வார்த்தைகளையே கூறவேண்டும்.
"Wandering around our America has changed me more than I thought. I am not me any more. At least I'm not the same me I was. "



இந்தப்பயணங்கள் வாழ்கையின் பயணங்கள்....

Tuesday, February 22, 2011

சுஜாதாவின் 'கொலையுதிர் காலம்' மற்றும் The Hound of Baskevilles ஒரு ஒப்புநோக்கு..




என்ன இப்படி ஒரு விசித்திரமான தலைப்பு என்று உங்கள் சிந்தனை ஓட்டம் எனக்கு புரிகிறது. 1901 எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலையும் 1981 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு தமிழ் நாவலையும் ஏன் மீண்டும் தோண்டி எடுத்து அதுவும் ஒப்பிட்டு ஆராய வேண்டும். எனக்கு வேறு வேலை எதுவும் இல்லையா என்பது போல இருக்கு உங்கள் பார்வை.


சுஜாதா அவர்களின் தீவிர இரசிகன் நான். அவரின் பன்முகத்தன்மையை நான் மிகவும் வியந்திருக்கிறேன். அவருடைய இழப்பு தமிழ்  இலக்கிய மற்றும் விஞ்ஞான துறைக்கு மிகவும் ஈடுகட்ட முடியாத ஒன்றாகும். அவருடைய கொலையுதிர் காலத்தை வாசித்துக் கொண்டு இருக்கும் போது அது Aurthur Cannon Doyleஆல் எழுதப்பட்ட கதைக்கு கருவிலும் அமைப்பிலும் பெரும் பங்கு தழுவி இருந்தது என்பது என்னை மிகவும் உறுத்தியது. அதனால் பல வருடங்களிற்கு முன்னர் வாசித்த ஆங்கில நாவலை மீண்டும் வாசித்து இந்த ஒப்புநோக்கை எழுதியுள்ளேன்.

Sherlock Holmes, Dr. Watson என்ற கதாபாத்திரங்கள் ஆங்கில நாவல் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து கொலைகள் கொள்ளைகள் பற்றிய துப்பறியும் கதைகள் மிகவும் ஈர்ப்பனவாகவும் துடிப்புடையதாகவும் இருக்கும். Aurthur Cannon Doyle என்ற நாவலாசிரியரால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. அந்த வரவேற்பிற்கு கட்டியம் கூற ஒரு சிறு சம்பவத்தை கூறலாம். ஒரு கதையில் Sherlock Holmesஜ கொன்றுவிட்டு இதோடு அந்த கதாப்பாத்திரத்தில் கதை எழுதுவதில்லை என்று ஆசிரியர் கூற. மக்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி Sherlock Holmes மீண்டும் உயிர்பிக்கப்பட்டார்.

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் ஒரு சில நாவல்களையும் அவர் எழுதயுள்ளார். இந்த நாவல்களை தொட்ட எவரும் அதை தண்ணி ஆகாரம் மறந்து படிப்பார்கள். அந்த வகையில் வந்த நாவல்தான் The Hound of Baskervilles.

The Hound of Baskervilles - (கதைச்சுருக்கம்)

Baskervilles என்வர்கள் காலம் காலமாக பெரும் சொத்து படைத்த குடும்பம். அவர்களுடைய வீடு ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது.  Charles Baskerville என்ற அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து போகிறார்.  அவரை Baskerville குடும்பத்தினை தொடரும் ஒரு பேய்தான் கொன்றது என்று நம்பப்படுகறது.  அந்தப் பேய் பல தசாப்தங்களுக்கு முன்னால் Baskerville குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் வல்லுறவுககுட்பட்ட பெண்ணால் ஏவப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் இறுதியாக அந்த பெரும் சொத்துக்கு வாரிசு இறந்தவருடைய மருமகன்  Henry Baskervilleதான். ஆனால் அவரை ஒரு ஆபத்து சூழ்கிறது. அதே பேய் அவரையும் கொல்ல துடிக்கிறது. இதை ஆராய்ந்து அவரை காப்பாற்ற Sherlock Holmes வருகிறார். இறுதியாக அப்படி ஒரு பேயும் இல்லை ஆனால் எப்போதோ தொலைந்துபோன ஒரு தெரியாத வாரிசுதான் இதை செய்கிறது என்பதை கண்டுபிடித்து Henryயை காப்பாற்றுகிறார் என்று முடிகிறது கதை


கொலையுதிர் காலத்திற்கு ஒரு சுருக்கம் சொல்ல நான் விரும்பவில்லை ஏனென்றால் அதை வாசித்தவர்களுக்குதான் என் கட்டுரையின் தலைப்பு ஓர் ஈர்ப்பைக் கொடுத்திருக்கும்.

அதனால் நேரடியாக ஒற்றுமைகளுக்கு போகிறேன். அங்கே Baskervilles என்பது போல இங்கே வியாசர்கள். அங்கே எவ்வாறு ஒரு மனிதனை விட பெரிய நாய் கொல்வது போல இதில் ஹோலோகிராப். அங்கே எவ்வாறு தெரியாத வாரிசு போல இங்கேயும் தெரியாத யாரோ வாரிசு என்று பல அடிப்படைகளில் ஒற்றுமை என்னை திகை்கக்க வைத்தது.

இது சுஜாதாவின் தனித்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.. இதை நீங்களும் ஆங்கில நாவலின் கதைச்சுருக்கத்தை சொல்லும் போது உணர்ந்திருப்பீர்கள். ஆனாலும் என்னபை் பொறுத்தவரை சுஜாதாவின் கதை சொல்லும் பாணியும் கதாப்பாத்திர அமைப்பும் The Hound of Baskervilles உடன் ஒப்பிடும் போது மிகவும் சிறப்பாக காணப்பட்டது. Sherlock Holmes என்ற கதாப்பாத்திரத்திற்கு எல்லாம் தெரியும் என்ற மேதாவிலாசத்தன்மை இதில் இல்லாமல் செய்த சுஜாதா, கணேஷ் என்ற முக்கிய கதாபாத்திரத்துடன் வாசகர்களை மிகவும் துடிப்புடன் கொண்டு நகர்த்தியுள்ளார்.

ஒரு திரில்லர் கதை என்ற பரிமாணத்துடன் நின்றுவிடாது அதனுள் விஞ்ஞானத்தையும் புகுத்தி முடிவில் அமானுஷ்யமா விஞ்ஞானமா என்ற முடிவை வாசகர்களுக்கு விட்டது அழகு.

சுஜாதாவின் தனித்தன்மைகுள் எனக்கு எழுந்த கேள்விகளுக்கு நானே கண்ட விடையை உங்களிடம் பகிர்திருக்கிறேன். ஒருவழியா நானே குழம்பி நானே தெளிஞ்சிட்டன். என்னைப்போல குழம்பியிருக்கும் சிலருக்கும் இது ஒரு தெளிவைத் தந்திருக்கும் என்று நம்புறன்.



கருவில் ஒற்றுமை பல காணப்பட்டாலும் கதை சொல்லும் நுட்பத்திலும் போக்கிலும் சுஜாதாவின் ஒரிஜினாலிட்டி அவரை அவராக வைக்கிறது என்பதே என் முடிவு.


-மோனி...

கவிதை...??..




மின்னல்களைப் பிடித்து
கூண்டுக்குள் இட்டுவிட்டேன்
மின்மினி ஔிகண்டு
இருளிற்கு ஓடுகிறேன்...

வானத்தை எடுத்து
கைக்குட்டை செய்துவிட்டேன்
வழிந்தோடும் வியர்வையில்
மூழ்கித் தத்தளிக்கிறேன்

வானவில்லின் மேலேறேி
வர்ணங்கள் மாற்றிவிட்டேன்
அகரம் விளங்காமல்
தகரமாய் தவிக்கிறேன்

சமுத்திரத்தைப்பிடித்து
செம்பிற்குள் அடைத்துவிட்டேன்
சதுரங்க கட்டைகளிற்குள்
மாண்டு விழிக்கிறேன்

கடவுளைக் கண்டு
விட்டேன்
கவிதை...???

- மோனி

போகும் வழியில்..




சிரித்தான்..
நானும் பதிலுக்கு..
எங்கேயோ கண்ட முகம்
"என்னை ஞாபகம் இருக்கா..??"
என்ற அவனது கேள்வி
"உங்களை ஞாபகமில்லாமலா"
என்ற எனது பதிலோடு
ஏதேதோ கேள்விகேட்டோம்..
என்னென்னவோ விடை சொன்னோம்..
வாழ்க்கை அழைத்துவிட
பிரிந்து போகும் போது
முய்ற்சித்தேன்
அவனது பெயரை ஞாபகப்படுத்த...

-மோனி..


Friday, February 18, 2011

Forrest Gump - உணர்வுகளின் கலவை




உயிர்ப்போட்டமான சினிமாக்களை இரசிப்பதென்பது தமிழ் இரசிகர்களுக்கு எருமை மாட்டை தண்ணீரில் வைத்து விலைபேசுவது போன்றாகிவிட்டது. அந்த வகையில் ஒரு உயிர்ப்போட்டமான திரைப்படத்தின் விமர்சனம் என்று இல்லாமல் விம்பத்தை பிரதிபலிக்கும் இந்தக் கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


உயிர்ப்போட்டமான சினிமாக்கள் பல உண்மையின் விம்பத்தை பிரதிபலிக்கும் போது மிகவும் மெதுவான திரைக்கதையையோ, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரே உணர்வை அதுவும் சோகத்தை சுமந்ததாகவே காணப்படும். வாழ்க்கையின் அழுத்தத்தை தொலைக்க முயற்சிக்கும் பலருக்கு இந்த படங்களை பார்ப்பதென்பது கல்லைத் திண்பது போல. ஆனால் Forrest Gump 1994ம் ஆண்டு வெளிவந்து சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட ஆறு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல் சினிமா வியாபார குணாதியசங்களை உயிர்ப்பான முறையில் வௌயிட்ட திரைப்படமாகும். ஒரு திரைப்படம் வியாபார ரீதியகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுவதென்பது மிகவும் அபூர்வான நிகழ்வாகும். அந்த அபூர்வத்தில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். ஆறு ஆஸ்கார்களை மட்டுமல்லாது இதுவரை ஹாலிவூட் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களுள் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் 21ஆவது இடத்தை பிடித்துள்ளது.
Robert Zemekics

Tom Hanks
Robert Zemekics இயக்கி Tom Hanks நடித்த இப்படம் 1986ம் ஆண்டு Winston Groom என்ற நாவலாசிரியரால் எழுதப்பட்ட Forrest Gump என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும் ஹாலிவூட் சினிமாவின் சராசரி இரசிகர்களுக்கு Tom Hanks, Robert Zemekics எந்த வகையிலும் புதியவர்கள் இல்லை. Back To The Future என்ற சினிமா வராலாற்றின் முக்கிமான திரைப்படத்தை எழுதி இயக்கிய பெருமை Robert Zemekicsயே சாரும். அதேபோல 1993 வெளிவந்த Philadelpia திரைப்படத்தில் Tom Hanksன் நடிப்பை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த திரைப்படம் அவரிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தமிழ் சினிமாவில் வெளிவந்த நியூ திரைப்படத்தின் கருப்பொருள் Tom Hanks நடித்த Big திரைப்படத்தில் இருந்து கருப்பொருள் எடுக்கப்பட்டதாகும்.

ஒரு பறவையின் இறகு வானத்திலிருந்து மெல்ல மெல்ல விழுந்து ஒரு பூங்காவில் கதிரையில் இருக்கும் ஒரு மனிதன் மீது விழுகிறது. அதை எடுத்து அந்த மனிதன் தன்னுடைய புத்தகத்தில் பத்திரப்படுத்திக்கொள்கிறார். அந்த மனிதர்தான் கதையின் நாயகன் Forrest Gump. IQ மிகக்குறைந்த ஒரு நபர் தனது பள்ளிப்பருவம் முதல் அந்தக்கணம் இளைஞன் ஆகும் வரை சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.

அட.... இந்த திரைப்படத்தில் என்ன அப்படி இருக்கு இப்படி எல்லாம் பீடிகை போட்டேன் என்று நினைக்கிறீர்கள் போல இருக்கு. அவசரப்படவேண்டாம்... இநத திரைப்படத்தின் தன்மையை மாற்றியது Tom Hanks ன் அசர வைக்கும் நடிப்பும் மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்ட திரைக்கதையும் ஆகும். "Stupid is what stupid does.." என்ற வசனம் தனது வாழ்க்கையின் பல இடங்களில் உபயோகிக்கும் நாயகன் இந்த வார்த்தைகளிற்கு பல வர்ணங்கள் தீட்டும் அழகும் இந்த படத்தின் குறிப்பிட வேண்டிய சிறப்பம்சம்.

மிகவும் மக்கான Forrest பள்ளிப்பருவத்தில் மிகவும் ஒதுக்கப்பட்ட ஒருவனாக காணப்பட்டான். பள்ளிப் பருவத்தில் இவனுக்கு துணையாக இருப்பது அவனது அம்மாவும், அவன் நண்பி Jennyம் ஆகும். சிறுவயதிலிருந்தே Jenny மீது அவனிற்கு ஒரு இனம் புரியாத  உணர்வு வளர்ந்துகொண்டு வந்தது. ஆனால் அவளோ தன் தந்தையாலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாள். இதனை புரியும் பக்குவமோ அறிவோ அவனிற்கு இருக்கவில்லை.


ஆனாலும் இருவரது உறவும் கல்லுாரி வரை தொடரந்தது. அங்கே இவனது மின்னல் போல ஓடும் திறமையால் American Football அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறான். இதனால் ஜோன் கென்னடியை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறான். JFK யை சந்திக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் தத்தரூபமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் கென்னடி சுடப்பட்டு இரண்டு தசாப்தங்களிற்கு பின் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லுாரியின் முடிவில் Forrest வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்க செல்கிறான். அங்கே அவன் வாழ்கையின் இரண்டாவது நண்பனை சந்திக்கிறான். Bubba என்ற கறுப்பின இராணுவ வீரனுடன் நட்பு கொள்கிறான். அடிமைத்தனத்தை பிறப்புரிமையாக கொண்டு வளர்ந்த அவனது நண்பனிற்கு வாழ்க்கை விடுதலை என்பதே இலக்காக காணப்பட்டது. இருவரும் இணைந்து இறால் பிடித்து விற்பனை செய்வது பற்றி திட்டமிடுகிறார்கள். இராணுவத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து யுத்தம் முடிந்த பின்னர்  அதை செய்வோம் என்று நண்பனிற்கு Forrest சத்தியம் செய்கிறான். ஆனால் வியட்நாம் யுத்தத்தில் ஒரு கொரில்லா தாக்குதலில் அவன் நண்பன் இறந்து போகிறான். Bubbaவின் இறுதி நிமிட காட்சிகள் கண்கலங்கவைக்கும். அதுவும் முக்கியமாக I want to go home... என்ற அவனது வார்த்தைகள் மறக்க முடியாதைவையாகும். அந்த கொரில்லா தாக்குதலில் காயப்பட்டிருந்த தன் படை பொறுப்பதிகாரியை அவன் காப்பாத்துகிறான். இருந்தாலும் அவரின் இரு கால்களையும் அவன் இழக்கிறார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டிற்கு திரும்பும் Forrest மீண்டும் Jenny ஐ சந்திக்கிறான். ஆனால் இந்த முறை அவள் ஒரு டிஸ்கோ அரங்கில் உடைகளை களைந்து ஆடும் Stripper ஆயிருந்தாள். ஆனால் அவளின் நிலையைப் புரிந்துகொள்ளும் அறிவு அவனிற்கு இருக்கவில்லை. கொஞ்ச காலம் இவனுடன் இருக்கும் அவள் அவனை விட்டு வேறொருத்தனுடன் செல்கிறாள்.

 தன் நண்பன் Bubba விற்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற இறால் பிடிக்கும் தொழிலிற்கு புறப்படுகின்றான். அப்போது அவனால் வியட்நாமில் காப்பாற்றப்பட்ட படைப்பொறுப்பதிபாரியும் இணநை்து பெரு வெற்றி பெறுகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவன் அம்மாவும் இறக்கிறாள். கவலையைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் Tom Hanks ன் நடிப்பு அற்புதம்.


பின் வீட்டிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் நாடு கடந்து ஓடுகின்றான். அதன் மூலம் பிரபல்யமைடைகிறான்.  இதைக் கண்ட அவன் காதலி என்ன செய்கிறாள் என்ன என்பதே படத்தின் கிளைமாக்ஸ். என்ன இவ்வளத்தையும் சொல்லிட்டு கிளைமாக்ஸை சொல்வில்லை என்று யோசிக்கிறீங்களா..??

கிளைமாக்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் கண்டேன். நீங்களும் அதை உணரவேண்டும் என்றால் நீங்கள் இந்தப் படத்தை நீங்கள் பாரக்கவேண்டும். முதல் வேலையாக இந்தப்படத்தை எடுத்து பாருங்கள்....



கண்ணீர், கவிதை, சரித்திரம், சிரிப்பு, சிந்தனை என்று பல வர்ணங்களை சுமந்து வந்த இந்தப்படம் உண்மையில் உலக சினிமா வரலாற்றில் முக்கியமான படமாகும். தமிழ் இரசிகர்கள் சரியான மசாலா படம் பார்க்க வேண்டும் என்றால் இதைப் பாருங்கள்......

-மோனி....(மோகனரங்கன்)