Tuesday, February 22, 2011

கவிதை...??..




மின்னல்களைப் பிடித்து
கூண்டுக்குள் இட்டுவிட்டேன்
மின்மினி ஔிகண்டு
இருளிற்கு ஓடுகிறேன்...

வானத்தை எடுத்து
கைக்குட்டை செய்துவிட்டேன்
வழிந்தோடும் வியர்வையில்
மூழ்கித் தத்தளிக்கிறேன்

வானவில்லின் மேலேறேி
வர்ணங்கள் மாற்றிவிட்டேன்
அகரம் விளங்காமல்
தகரமாய் தவிக்கிறேன்

சமுத்திரத்தைப்பிடித்து
செம்பிற்குள் அடைத்துவிட்டேன்
சதுரங்க கட்டைகளிற்குள்
மாண்டு விழிக்கிறேன்

கடவுளைக் கண்டு
விட்டேன்
கவிதை...???

- மோனி

No comments:

Post a Comment