Sunday, June 26, 2011

ஒரு பருந்தும்... பல காகங்களும்...




கதிரவன் எல்லையில் மேலெழ
காக்கைக் கூட்டமொன்று நகர்கிறது
தனியே தன் கூட்டிலிருந்த பருந்தொன்றை
திட்டமிட்டு தாக்குகிறது..

பருந்து இதை எதிர்பார்திருந்தது - ஆனால்
இந்த தனிமையை இல்லை
புரியாத மொழி பேசும் காக்கைகளுடன்
தன் மொழி பேசும் காக்கைகளும் கண்டு
திகைத்து நின்றது - புன்முறுவலுடன்
கருங்காக்கைகளுடன் - ஓரத்தில்
பல வௌ்ளைக் காகங்களும் நின்றது
கண்டு புரிந்த நின்றது - பருந்து

எண்ணிக்கையில், பலத்தில் மேலெழுந்த
காக்கைக்கூட்டத்தின் முன்
பருநதின் நிலை தோல்வியை நோக்கியது..
கொண்டு குணமும் - கொதிக்கும் இரத்தமும்
கொண்ட பருந்து - அன்று
நில்லாமல் போராடியது - தம்
எண்ணிக்கைக்கு எட்டமுடியாத
காக்கைகளை விரட்ட முற்பட்டது..

தன்னைக் காக்க தன் சகோதரர்
வருவர் என்று தனித்திருந்தது
பாவம் அன்று தெரியவில்லை - தன்
சகோதரர் என்றிருந்தது - பருந்துகளல்ல
நரிகள் என்று..

பருந்தின் இறக்கை தாக்கப்படுகிறது
மூர்க்கத்னத் தாக்குதலில்
கண்பறிக்கப்படுகிறது
போராடியது - விடாமல்
போராடியது...
வீரம் உதிரச் சொத்து அதற்கு

இறுதியில் பருந்து வீழ்த்தப்படுகிறது
தோற்றம் சிதைக்கப்படுகிறது.....
வீரவெற்றி பெற்றதாக கரைந்துகொண்டே
காகங்கள் பறந்து செல்கின்றன

முடிவில்..
பருந்தின் சிதையாத
கூட்டிலிருந்து சில பருந்துக் குஞ்சுகள்
கண் திறக்கின்றன....

-மோனி..




Monday, June 20, 2011

எழுதிக்கொள் இதனை... நான் ஓர் தமிழன்...




('வாக்குமூலம்..' என்ற பாலஸ்தீனக் கவிதையை தழுவி நான் எழுதிய கவிதை இது...)

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது அடையாள அட்டையில் - மட்டுமே
'நான்' என்ற அடையாளம் கொண்டவன்
கோபமா உனக்கு..??

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எழுதும் எனது பெயரும்
போகவிருக்கும் சவப்பெட்டியும்
தவிர
ஒன்றும் இல்லை எனக்கு
ஆனாலும் - உன்
கருணை கேட்டு இரந்திட மாட்டேன்
உனக்கு முழந்தாளிட்டு பணிந்திடேன்
மாறாக - என்
பாதங்களில் இறந்துபோவேன்..


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
கல் தோன்றி மண்தோன்றமுன்
தோன்றி
வெயிலும் சோலையும்
பாராட்டிய வீரமண்ணை
சேர்ந்தவன் நான் - என்
மரணங்கள் உன்
வெற்றியை கொன்றே செல்லும்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
என் கண்களைப்போலவே
என் தலைமயிரும் கறுப்பு
எனது விலாசம்,
மறுக்கப்பட்ட ஒரு தூாரத்து கிராமத்தில்
நீ கொண்டுவந்த குடியேற்றங்களால்
ஒதுக்கப்பட்ட குப்பைமேடு அது
அதன் தெருக்களுக்கு பெயரில்லை
வாழ்வுகளுக்கு நாதியில்லை
அங்கே வந்தென்னை கேள்
நான் என்று நாம் வருவோம்


எழுதிக்கொள் இதனை
நான் ஓர் தமிழன்
எனது நிலத்தை திருடினாய்
நீ
எனது சகோதரிகளை சூறையாடினாய்
நீ
எனது குழந்தைகளை கொன்றாய்
நீ
நீ  விட்டுவைத்தது இந்த
வனாந்திரம் மட்டுமே...

இவை அனைத்துக்கும் மேல்
இதனையும் எழுது - நான்
யாரையும் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல

ஆனாலும்- நீ
கவனம்
முடிவுகள் என்றுமே நிலையற்றது...

-மோனி..


Sunday, June 19, 2011

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??




யாரோ கூப்பிடும் குரல் கேட்டு
விழித்துக் கொண்டேன்

அரை நித்திரையிலிருந்து
யாரோ என்னை கூப்பிடவதுபோலிருந்தால்
விழித்துக்கொண்டேன்

அபயத்தின், வலியின்,
மரணத்தின், கோபத்தின்
அழைப்பின் குரலது..

குரலின் சொந்தம் தேடி
ஊரும் இடமும் தேடினான்
யாரும் புலப்படவில்லை

மீண்டும் புரண்டு புரண்டு படுத்தேன்
அதே குரல் மீண்டும் கேட்டு
மீண்டும் விளித்துனக்கொண்டனே்..

புரிகிறது, அந்த குரல்
வெளியிருந்தல்ல - என் உள்ளிருந்து
கேட்கிறது..

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??

-மோனி..