Thursday, March 31, 2011

நானும் 5 star ஹோட்டலுக்கு போயிருந்தேன்....




கண்ணாடியா? தரையா?
ஏழைவிட்டு கண்ணீர்
கழுவியதா....???
வாய்பிளந்து தலைகுனிந்து
முகம் பார்த்து
பெருமூச்சுவிட்டேன்...
"நல்ல காலம் சாரம் கட்டவில்லை.."
என்று...

அமர்ந்தேன், நண்பன் அருகில்
"Good morning sir.."
அண்ணாந்து பார்த்தேன்
சற்றும்ஒட்டாத புன்னகை
அவன் முகத்தில் ஒட்டியிருந்தான்
மட்டை கொடுத்தான்
மடிக்காமல் வாங்கி வாசித்தேன்

சோளக்கூழில் மிளகாய் தேடுபவன்
நகரத்திற்கு வந்து அண்ணாந்ததை போல
புரட்டிப் பார்த்தேன், தலைகீழாய் பார்த்தேன்
புலப்படவில்லை, புரியாமலே
கோழி பெயர் போட்டதை
கோடிட்டு காட்டினேன்

வரும் வரைக்கும் அங்கும் இங்கும்
வாய் பார்த்தேன்
எல்லாரும் மென்று முழுங்கிறார்கள்
எவனும் இரசிக்கவில்லை
"புசிக்க இரசிக்க மறந்த மனிதன்
மரித்தே வாழ்கிறான்.."
இவர்களுக்கு
இரங்கல் அறிக்கை
இரைந்து கொண்டிரருக்க

பளிச்சிடும் பாத்திரத்தில்
பரிமாறினான்
இரும்பு இரண்டு கொடுத்தான்
இருகை நீட்டி வாங்கினேன்
கைபிசைந்து சாப்பாட்டை
கைமா பண்ணணி சாப்பிடுவதில்
உள்ள சுகம் இவ் வையத்தில்
உளதோ... ?? என்றெண்ணி
கொடுத்த இரும்பை கடாசிவிட்ட
கொண்டு வந்த சாப்பாட்டில் கை வைத்தேன்
அருகில் இருநத்தவன்
அவன் கிட்னியை யாரோ
திருடியது போல என்னை
தின்று பார்த்தான்

சாப்பாட்டை
கடித்தேன் கரைந்து
உறிஞ்சினேன் உருகியது
உப்பில்லை உறைப்பில்லை
ஒடியற் கூழ் குடித்தால்
ஓடி வருமாம் ஆனந்த கண்ணீர்
எனக்கும் வந்த்து கண்ணீர்
என் நிலை எண்ணி வந்த துக்க கண்ணீர்

மென்று தின்று
முக்கி முனகி
சாப்பிட்டு முடித்து
சற்றே வெளியே வந்து

எனக்குள்
சிலாகித்தேன்
"அம்மா உன் கருவாட்டு
குழம்பும் புட்டும்
ஒரு கோடி தேறும்...."

-மோனி...


Sunday, March 6, 2011

காதல் கடிதம்...




அன்புள்ள காதலிக்கு,

கண்ணீரால் இதை எழுதவில்லை
உதிரத்தால் நிறத் தீட்டவில்லை
உணர்வுகள் கொண்டு நிரப்பவில்லை
வலியால் துவண்டு கரையவில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

வார்த்தைகளில் தெரிவதில்லை அம்மா
உள்ளங்களின் ஆழம்
மெளனத்தில் கூட புரிந்துவிடுமடி
உண்மைக் காதல்

உன்னை மறந்து போகவுமில்லை
அல்ல - நினைத்தே
உருகிப் போகவும் மாட்டேன்

நிழலாய் மாறுமுன்
நினைவுகளின் - வாசலினின்று
அழுது உருகுகிறேனென்று
பொய் சொல்லவுமில்லை

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

கடிதங்கள்
துாரங்களின் அடையாளங்கள்
நேசங்களின் அலங்காரங்கள்
"என்றும் என்னோடு இருக்கும்
உனக்கு எது இதற்கு?"  என்று
கவிதையில் பொய்யும்
சொல்லப் போவதில்லை

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
உன்னைத்தான் காணவில்லையே

நீ என்னுள் தந்த காயங்களை
இரசிக்கிறேன்
நிரப்பி வழித்த சோகங்களை
நேசிக்கிறேன் - என்று
வைரமுத்துவாய் காசிற்கு
புழுகவும் மாட்டேன்

நீ இல்லையென்றால் செத்துவிடுவேனென்று
முட்டாளாய்
உன் நினைவுகளில் வாடி மடியும்
பித்தனாய்
நிச்சயமாய் வாழமாட்டேன்

திரும்பும் இடமெல்லாம்
உன் நினைவுதான் என்று
பிதற்றவும் மாட்டேன்

உன்னை இழந்த சோகத்தில்
தாடியும் கையில் சாடியுமாய்
உன் மேல் சத்தியமாய் போகமாட்டேன்

சாதிக்க இலட்சியங்கள்
நூறு உண்டு எனக்கு

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

என்னதான் சொல்லவருகிறான்
இவன் என்கிறாயா..??
நீ நெஞ்சில் பூத்துவிட்டாய்
இனி அது உதிராது

நான் கடந்து போகிறேன்
உ்ன் மேல் கொண்ட காதலுடன்

என்னோடு வருவதும்
இல்லை போவதும்
உன்னோடுதான்

அன்புடன்.
காதலன்

இது வெறும் கடிதம்
இதில் என்ன தெரியப் போகிறது

-மோனி...

Saturday, March 5, 2011

திறந்தே வை....




வழிதவறி -  உன் வீட்டு
வழிஅறிந்தே
வாசல் வந்தேன்...

குணம் கெட - உள்ளும்
மனமும் கெட்டு
உன் அணையை
தேடிவந்தேன்...

கேட்ட அடையாளம் சரி
பெயர் மாற்றிவிட்டாய் போல
உனக்கும் அதன் தேவைதான் என்ன...??
எனக்கும் அதன் தேவைதான் என்ன..??

கொடுக்க விலை - தெரியாது..
காசில்லாவிட்டால்...
கடவுளிற்கும் கதவுசாத்துவாய்
நீ..

அத்தோடும் சேரத்து
பையில் இரண்டும் உண்டு

கதவைத் திறந்தே வை...

- மோனி..