Friday, April 29, 2011

வானம் - எல்லையற்றது...




வாசகர்கள் கவனத்திற்கு... இது வானம் படத்தின் விமர்சனம் அல்ல... மாறாக அதன் பாதிப்பால் ஏற்பட்ட பிதற்றல்...


பெரிய எதிர்ப்பாரப்புகள் ஏதும் இல்லாமல்தான் நான் படம் பாரக்க போனேன். ஆனால் ஒரு கனத்த மனத்துடன் திரும்பி வந்தேன். அது ஒரு திரைப்படம் என்று என் அறிவு ஏற்றுக்கொள்ள என்னால் இதுவரை முடியவில்லை. எல்லா விதத்திலும் அற்புதம்.

ஸ்டிஆர் என்று டைட்டில்ல போடும் போது எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இவ்வளவு பந்தா தேவைதானா என்று யோசிச்சன். ஆனால் சிம்பு.. நீங்க இந்த படம் நடிச்சதுக்கு எவ்வளவு பந்தா வேணும் என்றாலும் போடலாம்..

தீவிரவாதம், பகட்டு, அதிகார வெறி, சுயநலம், அறியாமை, இயலாமை போன்று இந்த உலகத்கில் ஊடுறிவிப்போன விடயங்களை நன்றாக சொல்லி இருக்கிறார். தற்கால சினிமாவில் ஒரு சிறிய விடயத்தை எடுத்து அதை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் மனித முதிர்ச்சிக்கு இதுவரை கிட்டாத விடயங்களை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குணர்.. அதை நெஞ்சுருகும் வித்த்தில் கொடுத்தும் உள்ளார்.

ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தை, அனுஷ்காவிற்கு கூட வரும் அரவாணி, லாரி ஓட்டுற சிங், கடைசியாக டிராக்டர் நம்பர் பிளேட்டில் கணக்கு போடும் சிறுவன் என்று ஒவ்வொரு விடயங்களையும் நன்றாக பார்த்து பார்து செதுக்கியுள்ளார் இயக்குணர்.

நடிப்பு சொல்லவே தேவையில்லை.. சிம்பு, பரத். பிரகாஷ்ராஜ், சரண்யா, அனுஷ்கா என்று எல்லாரும் கதைக்குள்ள ஒன்றிக்க வைத்துவிட்டனர்.

தமிழ் சினிமாவின் மசாலா பாணி பல இடங்களில் தெரிந்தாலும். அது மிகவும் நகச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திச்சு...

படம் முழுக்க சிம்புதான தெரிவதுதான் சிம்பு பட வழக்கம். ஆனால் இதில எல்லாருக்கும் வாய்ப்பு இருந்திச்சு... இசையில யுவன் பிச்சிட்டாரு. அதுவும் "வானம்..." பாட்டு ஒவ்வொரு முறை ஒலிக்கும் போது அது மனசை தொடுகிறது. நிரவ்ஷாவின் கமராவைக் கவனிக்க முடயாத அளவிற்கு கண்கள் சில நேரம் கலங்கி போகிறது. அதிலயும் திருடிட்டு போன காசை சிம்பு மறுபடியும் கொடுக்கிற காட்சி அற்புதம்...

படத்ததில் குறைகள் இருக்குது... ஆனால் அதை கிளைமாக்ஸிற்காக கண்டுக்காம விடலாம். அன்பே சிவம், ரங் டீ பஸந்தீ (ஹிந்தி) போன்ற படங்களின் கிளைமாக்சிற்கு நிகரான நெஞ்சைத்தொடும் கிளைமாக்ஸ்...

அதிலயும் கடைசியா அனுஷ்கா சொல்ற டயலொக்..
"எப்படியும் வாழலாம் எண்டிருந்த எங்க வாழ்ககையை ஒரு நல்ல சாவு இப்படித்தான் வாழனும் என்று காட்டிருச்சு.." சூப்பர்..




வானம்.. என்றுமே எல்லையற்றது....

Tuesday, April 26, 2011

என் சிறு கவிதைகள்...





(இது நான் எழுதி சிறு கவிதைகளின் ஒரு சிறு தொகுப்பு...)

கடைக் கண்ணாடிகளில் 
விழுமெம் விம்பத்தை 
இரசிக்கிறோம்...
எம்மை விட 
அதிகமாக...
---------------------------------------------------------------------
பூமியில் உள்ளதாடா சொர்க்கம்
அடக்கி வைத்த மூத்திரத்தை
பெய்து பார் - அப்போது தெரியும்...
---------------------------------------------------------------------

அம்மாவை விடவும்
சொர்க்கமொன்று உண்டென்றால்
எவ்வளவு உன்னதமானது
அது...
---------------------------------------------------------------------
அண்ணாந்து வானம் பாரத்து 
நிம்மதியடைகிறேன் - இன்னமும்
மேலே இடம் உள்ளது...
---------------------------------------------------------------------
'இதுவும் போய்விடும்...' என்றெழும்
கவிஞனும் காசுக்குத்தான்
எழுதுகிறான்.....





Sunday, April 24, 2011

இனி என் பெயர் பிரேம சாய்பபாபா...




தனக்கு மரணமே இல்லை. தான் கடவுள் என்றும். தான் இந்தப் பிறவியில் போனதும் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாய்பாபா என்ற பெயரில் அவதரிப்பேன் என்று சத்திய சாய்பாபா கூறியிருந்தார்.
இதனால எத்தனை பெற்றோர் தங்களுடைய குழந்தையை தூக்கிட்டு பிரேம சாய்பாபா என்று கிளம்பபோறாங்களோ தெரியேல்ல.

ஆனா பாருங்க இதுதான் பிரேம சாய்பாபாவாம்... பார்க்க என்னை மாதிரியே இருக்கு என்று நண்பர்கள் சொல்றாங்க



அதனால முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒரு விண்ணப்பத்தை நானும் போட்டு வைக்கிறன்.

பின்ன வெட்டிய உட்காந்திக்கிட்டே தின்கிற யோகம் யாருக்கு கிடைக்கும். அந்த யோகம் எனக்கு கிடைக்காதா.

ஏன்பா கழுதை ஏதாவது இருக்கா...??

Saturday, April 23, 2011

மயிர்ச்சடையானவர்க்கே மடங்கள் உண்டாக்குகிறோம்....




ஒரு மனிதனின் மரணத்தை வைத்து விமர்சனங்களை வெளியிடுவது தவறானதுதான் ஆனால் நேற்று நடந்த சம்பவம் என்னை இந்த பதிவை எழுத வைத்துவிட்டது. இது யார் மனதையேனும் பாதிக்குமேயானால் என்னை மன்னிக்கவும். ஒரு மனிதனைப்பற்றி விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை.

 நேற்று எனக்கு தெரிந்த உறவினர் வீட்டை போயிருந்தேன். அவர் தீவிர சாய் பாபா பக்தர். அவர் வீட்டில் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மிகுந்த பிரச்சினையில் உள்ளார். நேற்று வழமையை விட கவலையாக இருந்தார். ஏன்.. சாய்பாபாவின் உடல் நிலை மோசமாகிவிட்டது அவரை மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். எப்படியாவது போய் புட்டபத்தியில் பார்க்க ​வேண்டும்.

சாய்பாபா என்ற ஒரு தனிமனிதன், அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார். சாய் பக்தர்களை கேட்டால் சொல்வார்கள்.. "அவர் கடவுளாக வாழ்ந்தவர்.." என்ன கொடுமை இது... கடவுள் என்ற கருப்பொருளே இல்லை என்று விஞ்ஞானம் நீரூபிச்சிட்டு வருது இதில மனிதன் கடவுளா...??

நான் மறுக்கவில்லை எத்தனையோ மனிதர்கள் மக்கள் மத்தியில் கடவுளாக வாழ்கிறார்கள் காந்தி, மண்டேலா போன்ற பலர் உள்ளார்கள்தான். அவர்கள் தங்கள் வாழ்க்கையே மக்களுக்காக அர்பணித்தவர்கள்... அப்படி ஒரு தியாகத்தையும் பாபா செய்துவிடவில்லை...



சாய் டிரஸ்ட் பண்ட் எத்தனையோ ஏழை மக்களின் மருத்துவ கல்வி செலவிற்கு உதவியுள்ளது என்று பலர் மார் தட்டுகிறார்கள்.
சாய் பாபா தன்னுடைய சொந்த காசில இருந்தா செய்தார். மக்கள் கொடுத்த காசை மக்களுக்கே கொடுக்கிறது எப்படி பெருமை. அவர் பல சித்துகள் செய்தாராம்... சித்துகள் செய்துவிட்டால் கடவுள் ஆகிவிடுவாரா...?? இப்படித்தான் வாயில இருந்து லிங்கம் எடுக்கிற எத்தனை பேரிடம் ஏமாந்து போனோம்.


"சாயின் உடல் நிலைக்காக பக்தர்கள் வீசேட பிரார்த்தனை...".. என்ற செய்தியை பத்திரிக்கையில் வாசித்து மிகுந்த வருத்தப்பட்டேன். ஒருமனிதன் தன் அந்திம காலத்தில் போய் சேரவேண்டிய நேரத்தில் போய் சேருகிறார். அதைத் தடுக்க சோகமாக  பெரிய பிரார்ததனைகள்... ஆனால் இங்கே ஈழத்தில் எத்தனையோ இளம் பிஞ்சுகள் பலியிடப்பட்ட போது யாருமே பேசவில்லை...  அப்போது உங்கள் பிரார்த்தனைகள் எங்கே...??

இது எனக்கு ஜெயகாந்தனின் ஒரு கவிதை ஞாபகம் படுத்துகிறது....

நடந்தும் பிறந்தும் ஓடியும் ஊர்ந்தும்
                  நாமெலாமிங்கு அலைகின்றோம்
இடந்தெரியாமல் முகம் தெரியாமல்
                 எவரையோ இங்கு தேடுகின்றோம்
தடமென ஒன்றுமில்லை நடந்து நடந்து
                 தடங்கள் உண்டாக்குகின்றோம்
இடமென ஒன்றுமில்லை இருந்து - இருந்து
                 இடங்கள் உண்டாக்குகன்றோம்
விடமென ஒன்றுமில்லை வெருண்டு வெருண்டு
                 விடங்கள் உண்டாக்குகிறோம்
மடமென ஒன்றுமில்லை மயிர்ச்சடை யானவர்கே
                 மடங்கள் உண்டாக்குகிறோம்....



எப்படி இருந்த நாங்க...




எப்படி இருந்த நாங்க...



இப்படி ஆயிட்டம்....

  


சைமண்டசை குரங்கு என்று பேசி இனவாதத்தை தூாண்டினார் என்று கூறப்பட்ட ஹர்பஜன் சிங்கும், சைமண்டசும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்ட விதம் பார்ப்வரகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது....

பாசக்கார பயலுகள்பா...
அப்ப உங்க கோபம் எல்லாம் அவ்வளவும்தானா....??? போங்கப்பா...





Friday, April 22, 2011

இந்த அண்டத்தின் தொடக்கம் : கடவுளின் இருக்கை




இதைப்பற்றி பலர் தங்களுடைய பதிவுகளை எழுதியுள்ளார்கள். அந்த வகையில் நான் முதலாதவனும் கிடையாது, கடைசியும் கிடையாது. ஆனால் எனக்கு தெரிந்தவற்றை பகிரவேண்டும் என்ற முனைப்புடனே இதை எழுதுகிறேன்...


இந்த உலகத்தில் மனிதன் சிந்திக்க தொடங்கிய காலங்களில் இருந்து ஒரு கேள்வி என்றுமே இருந்து வந்துள்ளது. அது இந்த பூமி எவ்வாறு உருவானது..?? அதை உருவாக்கியது யார்...?? அதாவது முட்டையில் இருந்து குஞ்சு வந்ததா...?? குஞ்சிலிருந்து முட்டை வந்ததா...?? என்றது.


கடவுள் ஒரு உணர்வுசார்ந்த நிலை... அதன் இருக்கையை பற்றி கேள்விகேட்பது முட்டாள்தனமானது எனற கூறுபவர்களுக்கு... நான் கூறவருவது ஒரு விஞ்ஞானம் நோக்கிய தேடல்....




காலம் காலமாக இந்த கேள்விகளுக்கான விடைகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் மாறிவந்துள்ளது. பூமி தட்டையானது அது மாறாக உருண்டையாக இருந்திருந்தால் கடல் நீரெலல்லாம் வெளியில் கொட்டுண்டிருக்கும் என்ற அடிப்படைவாதக் கருத்தில் இருந்து மனிதன் இன்று SuperString, M theory என்று விரிவடைந்துவிட்டான். ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை யாராலும் அறுதியாக கூற முடியவில்லை. கடவுள் என்ற இறுதியும் முடிவுமற்ற ஒரு பொருளே இந்த அண்டத்தை உருவாக்கியது என்ற கூறி ஒரு அணியினரும். இல்லை அது விஞ்ஞான சக்திகளால்தான் உருவாக்கப்பட்டது என்று இன்னொரு அணியினரும் இரு தரப்புகளில் நின்றுகொண்டு போரிடுகிறார்கள்.


இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு போதாது. மாறாக இந்த கேள்விகளுக்கானஒரு சில விளக்கங்களை 1988 ஆம் ஆண்டு Stephen Hawking என்ற பிரபல விஞ்ஞானியால் The origin of the universe என்கிற பேச்சிலிருந்து சில தகவல்களை தருகிறேன்.

அந்த தொகுப்பில் உள்ள பல விடயங்கள் கற்றுத்தேர்ந்த  பௌதீகவியலாளர்களிற்கு மட்டுமே விளங்ககூடியது. எனக்கு அதில் உள்ள பல விடயங்களை பற்றி தெரியாது. உதாரணத்திற்கு அவர் கையாளும் General Relativity, Quantam mechanics போன்ற கொள்கைகள் பற்றிய சரியான அறிவு எனக்கு இல்லை.

அதாவது ஹபிளின் கண்டுபிடிப்பில் இருந்து உறுதி செய்யப்பட்ட அவதானங்களின் அடிப்படையின் அதுவரை நியூட்டன்  கூறி வந்த நிலையான அண்டம் என்ற கொள்கை பொயக்கிறது.  ஏன் ஐன்ஸடீனே கூட தன்னுடைய விசேட சார்புக் கொள்கையில் அண்டம் நிலையானது மாறாதது என்று கூறியுள்ளார். அப்படி இந்த அண்டத்தை நிலையாக வைப்பது cosmological constant என்று கூறுகிறார். ஆனால் பின்நாளில் அது இல்லை என்றும், அவ்வாறு தான் கூறியது பெரிய பிழை என்றும் ஏற்றுக்கொள்கிறார்.


அந்த வகையில் தன்னுடைய பேச்சில் ஹாக்கிங் அண்டம் ஒரு ஒருமைப்பாட்டில் இருந்து உருவாகவில்லை என்றும். அதற்கு சான்றாக தன்னுடைய no boundry கொள்கையையும் முன் வைக்கிறார்.


ஆனால் அவருடைய பேச்சில் எனக்கு மிகவும் முக்கியம் எனப்பட்ட கடைசிப் பந்தியை இங்கு மொழிபெயர்ப்புடன் சாராம்சத்தை தருகிறேன்.


"....என்னுடைய இந்தக் கொள்கையுடன். இந்த அண்டத்தின் உருவாக்கத்தின் போது பௌதீக விதிகள் செல்லாது என்ற கொள்கையை இல்லாமல் செய்கிறது. மாறாக இந்த அண்டத்தின் இயக்கம் உறுதிசெய்யப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளின் பிரகாரம் இயங்குகிறது என்பது உண்மையாகிறது. அதாவது இந்த உலகத்தினதும் அண்டத்தினதும் மொத்த இயக்கத்தையும் விஞ்ஞானத்தால் விளங்கப்படுத்தமுடியும். அது இந்த அண்டத்தை கட்டுப்படுத்துவது கடவுள் இல்லை என்பதை கூறவருகிறது. அதாவது இந்த அண்டம் ஆரம்பத்தில் உருவாகிய விஞ்ஞான விதிகளின் பிரகாரம் இயங்கி வருகிறதே தவிர கடவுளின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த அண்டம் ஏன் தன்னை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்தது என்ற கேள்விக்கு என்னிடமோ விஞ்ஞானத்திடமோ விடை இல்லை. ஒருவேளை கடவுள் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்...."





மேலதிக வாசிப்பிற்கு :- http://www.ralentz.com/old/astro/hawking-1.html


இது பற்றி மேலதிக தகவல்களை பெறு விரும்புவர்கள். சுஜாதாவின் "கடவுள்" தொகுப்பை வாசிக்கவும்.

-மோனி...

Monday, April 18, 2011

ஜநா அறிக்கையும் தமிழன் நிதர்சனும்.... (எனது பார்வையில்)




கசியவிடப்பட்ட  ஐநா அறிக்கை...
இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போரக்குற்றங்களை புரிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படித்திகிறது...
ஐநா நடவடிக்கை எடுக்கப்படும்...

என்கிற தகவல் எல்லா இணையத்திலும் பத்திரிகைகளிலும் செய்திகளை ஆக்கிரமித்து கிடக்கிறது...

'இலங்கைக்கு ஐநா பாதுகாப்பு வழங்கப்படாவிடின் சீனா, ரஷ்யாவை நாட நிற்பந்தம் ஏற்படும்' என்ற பாதுகாப்புச் செயலாளரின் அறிக்கை 'மக்களுக்காக நான் மின்சாரக் கதிரையைக்கூட ஏற்பேன்' என்று அறிக்கையாக நீளுகிறது இந்த நாடகம்.





தெற்கை ஆக்கிரமித்துள்ள இந்த செய்திகள் உண்மையில் வடக்கிலோ, கிழக்கிலோ பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மை. போர்க்குற்றங்கள் பற்றி அறிய ஐநா அறிக்கை ஒன்றும் இங்கு தேவையில்லை. எது உண்மை என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு கால யுத்தம் செய்துவிடாத ஒன்றை ஐநா அறிக்கை செய்துவிடப்போவதில்லை என்ற கருத்தே மேலாக ஓங்கி நிற்கிறது. 'எவ்வளவோ பாத்திட்டம் இவங்கள் என்ன புதிசா செய்யப்போறாங்கள்' என்ற நிலையே உள்ளது.



ஐநா அறிக்கை இலங்கை அரசிற்கு எதிராக இருந்தாலும். அதை அடுத்து எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட முயற்சி எடுக்கப்பட்டாலும் அதை சீனாவோ, இந்தியாவோ, ரஷ்யாவோ நிச்சயம் தடுக்கும் என்றும் அறிந்த விடயம். இதை எல்லாவற்றையும் மீறி என்ன நிகழ்ந்தாலும் அது காலம் கடந்ததாகவே கருதப்படும்.



வன்னியில் இருதரப்பு யுத்தத்திலும் இறந்திவிட்ட எத்தனையோ அப்பாவிப் பொதுமக்கள் மீண்டு வரப்போவதில்ல. எண்ணெய் வளம் இருப்பதால் லிபியா மீது இருந்த கரிசனம் அன்று தமிழன் மீது இருக்கவில்லை.
தமிழர்கள் தங்களை ஒரு சிறுபான்மை இனமாக ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறையை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களை பொறுத்தவரை தீர்வுத்திட்டம் பற்றியோ ஏன் கடைசி மாகாண சபை பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை. அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் வாக்களிப்பு சதவீதங்கள் இதற்கு சான்று பகிர்கின்றன.  அவர்கள் தங்கள் தேசிய வியாதியான 'மறதி'யை பெற்றுவிட்டார்கள். இப்போது வாழ்வதுதான் இயல்பு வாழ்க்கையும் என்ற நிலை வந்துவிட்டது.


நீண்ட தூரம் ஓடி விட்ட களைப்பு ஏற்பட்டுவிட்டதகவே தமிழர்கள் உணர்கிறார்கள். தமிழனை பொறுத்தவரை அவன் இலவு காத்த கிளி. இது வருத்தப்ப்ட கூடிய ஒன்றுதான் ஆனால் இதுதான் நாங்கள் நிதம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனம்...



Friday, April 15, 2011

என் கவிதைகள்...




என்ன சொன்ன போதிலும் - அதை
                          சொல்ல தகுதியில்லை என்கிறீர்
நீ எப்படிச் அதைச் சொல்வாய் என்றோ
                          ஏளனம் தன்னை பேசுகின்றீர்
முன்னம் செய்ததெல்லாம் - இவன்
                          மறந்துவிட்டான் என்கின்றீர்
பின்னம் செய்யப்போவது இதுவென்று
                          அடித்து உரைக்கின்றீர்
எண்ணம் இவனது சாக்கடை - இவன்
                          எதுக்கும் உதவானென்கின்றீர்
அறிந்ததேனென்றேன் அகம்பாவமென்றீர்
                          அறியவில்லையென்றேன் அறிவிலியென்றீர்
புரிந்தேனனென்றேன் வெறுங்கூச்சலென்றீர்
                          புரியவில்லை என்றால் உட்கூடென்றீர்
நான் சொன்னது என்னைதான்
                        சொல்லுகிறேனென்று புரியவில்லை உமக்கு
சொல்வதை நிறுத்திப் பார்த்தேன் - உம்
                           சொல் 'வதை' முடியவில்லை
நானும் மீண்டும் ஆரம்பித்துவிட்டேன
                           என் வாழ்க்கை எதுவென்றறிந்து.....

-மோனி...



Tuesday, April 12, 2011

Where's the spirit of Cricket ...??




The spirit of cricket is almost diminishing in the hearts of cricket lovers from all over the world after the 2011 WC. Although cricket lovers stand their loyalty to the team they support. But that support is mainly dominated by the iconic players from the team.

Retirement of Players

Speaking of retirements... I read a banner by a fan in the Mumbai Indians Vs RCB match last night

"Sachin is my God, Cricket is my world
When sachin retires
I am ready to leave my world
But worship the God"

This is the case we will find soon in Indian cricket. And Sri Lankan, Pakistani, South African cricket are just the same. When Sangakara, Mahela, Dilshan, Samaraweera walks out the team the spirit from the Sri Lankan cricket fans will also walk out. The same will happen with Pakistan when Afridi and Younis steps down.

This has already happen in the past, in West Indies, when the iconic players made their way out. Cricket went down from then onwards they could never recover. Even in Australia when the big guns Langer, Warne, Hayden, Martin and Gilchrist left. The consequences were the same.

The biggest problem is that we don't enjoy watching cricket because playing mostly is built with slog sweeps and heaves. The exquisite cover drives, the backfoot punch, the delicate glance are only seen by players who are about to leave. And the young players will need time to get there. The in between time is going to be a blackout for cricket.

The downfall of Australia

Cricket seems to have lost a lots of interest with the mighty Australia crumbling down. Whatever we may argue but the Australian of 2003 - 2007 was the best we have ever seen. But now they have become so vulnerable. And defeating them doesn't give the satisfaction. I don't mean that Australian will be back strong but i believe that it will take some time.

The sense of miss and sense of over

As far as Sri Lankan, Pakistan, England, RSA are concerned they feel a sense of let down. With Australia out of the equation this time each tean had a fighting chance to the cup but all missed it. I don't know what are playing in the minds of players but definitely fans hav lost the booming cricket spirit. And as far as India is concerned, they got what they needed. They don't want cricket anymore. It's all over with them.


Cricket is about to serve a blackout. To avoid this it should better produce some heroes.

Considering these facts i believe for my generation the feel of cricket will go down. Its the next set of fans will have to take over by watching the young teams perform, enjoy and hero worship them just as we did in our childhood with Sachin, Sanga, Gilly and others....
(These are only my views...)

- Moni..