Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Thursday, May 5, 2011

ஒசாமாவின் மரணம் - உலக அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்...





செப்டம்பர் 11 உடன் ஒசாமா என்ற ஒரு தனிமனிதன் இந்த உலகத்தின் போக்கையே தலைகீழாக திருப்பிப்போட்டான். அதுவரை தங்களை உலகத்தின் வல்லரசு என்று மார்தட்டி வந்த அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அடித்தான். அமெரிக்காவின் பாதுகாப்பு. பொருளாதாரம், புலனாய்வு  என்று மூன்று தூண்களை அடித்து நிலைகுலையச் செய்தான்.


பதிலடி கொடுக்க வேண்டும் என்று 'பயங்கரவாதம் மீதான போர்' என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொற்பதத்துடன் ஜோர்ஜ் புஷ் முஸ்லீம் தேசங்கள் மீது தங்கள் ஏகாதிபத்திய வெறியை வெளிக்காட்டினார்கள். சந்தர்பத்திற்கு காத்திருந்து பாய்ந்தது போலவே அந்த யுத்தங்கள் காணப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. மீண்டும் ஒரு உலகப்போர் தொடங்கும் என்று எதிர்பாரக்கப்பட்ட போது பல முதுகு குத்தல்கள் மூலம் அது இல்லாமல் போனது. முதலில் ஆப்கானிஸ்தான், பிறகு ஈராக் என்று தங்கள் தாக்குதல்களை தொடுத்தார்கள். பின் ஈரான் மீது ஒரு யுத்தம் தொடுப்பது போல பாவனையை ஏற்படுத்தினார்கள்.


இராணுவ படையெடுப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்து போல இருக்கவில்லை. எதிரிகள் பின்வாங்கி வளங்களை பாதுகாத்துக் கொண்டு மக்களின் பலத்தை வைத்து சிறு சிறு தாக்குதல்களை நடத்தினார்கள். ஒரு சில முஸ்லீம் நாடுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் பக்கம் நின்றாலும் பல நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு நேரடியாவோ மறைமுகமாகவோ உதவி வந்தார்கள். 


இதனிடையில் அமெரிக்கா பொருளாதாரம் வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எத்தனையோ அமெரிக்கா கம்பெனிகள் பாங்கரப்ட் ஆகின, மக்கள் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒரு ஆட்டு ஆட்டியது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இந்தியா இதில் பாரிய சேதங்களை சந்திக்காமல் தவிர்த்துக் கொண்டது. இதுவே பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இராணுவ தோல்வி, மக்கள் நேரடி எதிர்ப்பு, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாயப்பில்லாமை என்று அமெரிக்க வல்லரசு ஆட்டம் கண்டது. அதுவரை உலகத்திற்கே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நிலை போனது. அதன் விளைவு "பிராந்திய வல்லரசு" என்ற நிலை ஏற்பட்டது. 

என்ன இந்த பிராந்திய வல்லரசு..?? அதாவது உலகத்தின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஒவ்வொரு பலம் வாய்ந்த நாட்டின் ஆதிக்கம் ஓங்கி வந்தது. தெற்காசியாவில் பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற அல்லாடியதால் இந்திய பலம் ஓங்கியது. இதுதான் விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் இலங்கையில் வித்திட்டது என்பது வெளிப்படை. சீனா, ரஷ்யா என்று நாடுகள் தங்கள் பலங்களை மெல்ல மெல் வெளிப்படுத்தியது. இதில் முக்கியமான நிகழ்வு 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்.

உலக அரசியல் அரங்கில் அதிர வைத்த இராணுவ நடவடிக்கை இந்த படையெடுப்பு. ஜோர்ஜியா அமெரிக்காவின் கைப்பொம்மை என்பதும் ரஷ்யாவை கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் அவுட்போஸ்ட் என்பதும் வெளிப்படை. ஜோர்ஜியாவின் அரண்களை 2 மணி நேரங்களில் தகர்த்து உள் நுழைந்த ரஷ்ய இராணுவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது.

அமெரிக்காவின் கைப்பிடி மெல்ல தளரந்து வரும் போதுதான் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானார். அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட நிகழ்வு - கறுப்பினர் ஒருத்தர் அதிபரானது.  அவரை ஒரு கறுப்பு தேவதையாக சித்தரித்தார்கள். எதிரி நாடான கியூபாவுடன் கைகோர்த்தல். அதுவரை எதிரியாக இருந்து வெனிசுவேலா ஹகோ சார்வேஸ் உடன் கைகுலக்கல், படைகளை திரும்ப பெறல், திரும்ப பாரக்க வைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்று அமெரிக்கா மேடையை அதிர வைத்தார்.


இவருடைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் இவரின் மீது இருந்த செல்வாக்கை குறைத்து சென்றது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காதான் தனக்கு முக்கியம் என்ற போர்வையில் அவர் செய்த ஆட்சி அமெரிக்க வரலாற்றில் ஒரு புது நாடகம்.

ஆனால் அமெரிக்காவின் கை மீண்டும் மெல்ல மெல்ல அரசியல் அரங்கில் ஓங்கி வரத்தொடங்கியது. அதுவரை அதளபாதாளத்தில் சென்றுகொண்டிருந்த பொருளாதாரத்தின் வீழ்ச்சி இழுத்து நிறுத்தப்பட்டது. எகிப்திய புரட்சி, சூடான் வீழ்ச்சி, கடாபியின் பின்வாங்கல் என்று உலக அரசியலே அல்லாடிக் கொண்டிருக்கும் போது...

சில சில இடத்தில் அமெரிக்கா மறைமுக காய்நகர்ததல்களின் மூலம் வெற்றிகளை கண்டுவந்த அமெரிக்காவிற்கு லட்டு மாதிரி வந்தது ஒசாமாவின் வீழ்ச்சி....


"Justice is done." என்ற ஒபாமாவின் அறிக்கையுடன் இனி உலக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை எதிர்பார்கலாம். அமெரிக்காவிடமிருந்து யாரும் ஔிய முடியாது என்று ஒபாமா எல்லா நாடுகளிற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். பின் லேடனின் வீழச்சியுடன் அல்கைதாவின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகவிடும்...

பயங்கரவாதத்தின் மீது கடந்த தசாப்த காலமாக நடத்தி வந்த யுத்தம் ஒரு வழியாக ஓய்விற்கு வந்தவிட இனி அமெரிக்காவின் முழு கவனமும் சீனா மீது இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்கிறாரகள். ஒசாமாவின் மரணத்தை சீனா வரவேற்று அறிக்கை விட்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களுக்கு கெட்ட செய்தி. 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை எதிர்ப்பார்கலாம். அது சாதகமாவே அமையும்.

இதை விட தற்போது இந்தியா அரசியல் நெருக்கடி, ஜப்பான் இயற்கை அனர்த்தம், ரஷ்யாவில் புட்டினிற்கும் ரஷ்ய அதிபரிற்கும் இடையில் உள்ள அரசியல் குழப்பம் என்று மற்றை நாடுகளின் தள்ளாட்த்தை அமெரிக்கா தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளப் பார்க்கும்...


இதன் விளைவு .... "History Repeats Itself"

-மோனி...

(இந்தக் கட்டுரை எழுதுவதற்குரிய அறிவு எனக்கில்லை. நான் இதுவரை வாசித்த தகவல்களின் திரட்டி கொஞ்சம் பகுத்தறிவு கலந்தது..)



Wednesday, May 4, 2011

நரகத்தில் இருந்து டிவிட்டரில் ஒசாமா...!!!




சதாம் ஹசைன். அடோல்ப் ஹிட்லர் என்ற வரிசையில் தற்போது ஒசாமாவும் நரகத்ததில் இருந்து டிவிட்டரில் டிவிட் செய்து கொண்டிருக்கிறார்.



என்ன வழக்கம் போலதான் அமெரிக்க குசும்பு...


டிவிட்டரில் ஏற்கனவே ஒசாமாவின் பெயரில் பொய்யான கணக்கு திறந்து இருந்திருந்தது. அதை விட பல புதிய கணக்குகளும் போன ஞாயிறு திறக்கப்பட்டிருந்தது..

அதில் சில முக்கி டிவிட்ஸ்..

@OsamaBinIaden Osama Bin Laden
Obama thinks its a big deal that he found me....I've been on twitter this whole time #comeatmebro
@BinLadenInHell Osama Bin Laden
That Celine Dion music kept me up all friggin' night. Hell really sucks!
@BinLadenInHell Osama Bin Laden
That Celine Dion music kept me up all friggin' night. Hell really sucks!
@Real_Bin_Laden Osama bin Laden
OK, time for bed. All of the sudden, I am dead tired...oh...you see what I said there? I totally didn't even realize...That is funny...

@OsamaInHell Osama bin Laden
Oh good - turns out James Franco is teaching a class here next month.

@GhostOsama Osama Bin Laden
Well this sucks...I accidentally enabled location on my tweets.

மார்ட்டின் லூாதர் கிங்கின் வசனங்கள்
அடுததபடியாக டிவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அப்டேட்
"I mourn the loss of thousands of precious lives, but I will not rejoice in the death of one, not even an enemy. Returning hate for hate multiplies hate, adding deeper darkness to a night already devoid of stars. Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that." --Martin Luther King Jr.
( "நான் இறந்துபோன ஆயிரம் உயிர்களுக்காக கண்ணீர் விடுகிறேன் ஆனால் அவன் என் எதிரியாக இருந்தாலும் சரி, ஒருவனின் மரணத்திற்கை கண்டு களிக்க மாட்டேன்... . பலரது வெறுப்பிற்கு பதிலாக வெறுப்பைக் காட்டுவது என்பது நடசத்திரங்கள் அற்று இருண்டுபோன இரவிற்கு மேலும் இருட்டைக் கொடுப்பது போன்றது. இருள் இருளை விரட்டாது, ஔி மட்டுமே இருளை அடக்கும். வெறுப்பு வெறுப்பை விரட்டாது அன்பு ஒன்று மட்டும்தான் அதைச் செய்யும்...")


 இது அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவரான மார்ட்டின் லூாதர் கிங் சொன்னதா சமூக வலைதளங்களில் உலவுகிறது. ஆனால் இது முற்று முழுதாக அவரால் கூறப்படவில்லையாம். கடைசியாக கூறப்பட்ட பகுதி மட்டும் தான் அவரால் கூறப்பட்டதாம். என்ன கொடுமை பாருங்க...??அதில கூட நொட்டை பிடிக்கிறாங்க..

தாக்குதல் நடத்தும் போது ஒசாமாவிடம் ஆயுதமில்லை

 அமெரிக்கா இராணுவம் ஒசாமாவின் இருப்பிடத்தைத் தாக்கும் போது ஒசாமாவிடம் ஆயுதம் இருக்கவில்லையாம். இருந்தும் அவரை சுட்டுக் கொன்றது என்பது ஜெனிவா பிரகடனத்திற்கு எதிரானது...

அத்தோடு ஒசாமாவின் உடலின் உண்மையான படங்களை விரைவில் வெளிவிடுவோம் என்று CIA தலைவர் கூறியுள்ளார். இது ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்னவோ..

ஒசாமாவின் இருப்பிடத்திற்கு குவியும் விமரசனங்கள்




Google Maps ல் ஒசாமாவின் இருப்பிடத்திற்கு விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளனவாம். அதில் அதிக வரவேற்பைப் பெற்ற விமர்சனம்

"I heard that this place is now available (prior residents left suddenly and unexpectedly)."





 (நன்றி :- www.huffingtonpost.com)


Tuesday, May 3, 2011

அமெரிக்காவால் இதுவரைத் தேடப்பட்ட மோஸ்ட் வான்ட்ட(Most Wanted) குற்றவாளிகளின் முக்கிய பட்டியல்...




மே 1,2011 ஆம் திகதி அமெரிக்காவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்து மிக முக்கிய குற்றவாளிகளின் பட்டியலைப் பாரக்கலாம். (இந்த தொகுப்பில் ஒசாமாவைத் தவிர்த்திருக்கிறேன்...)


Ted Bunty


 உலகத்தில் பெண்களை மிகவும் கொடிய முறையில் கற்பழித்துக் கொன்ற சைகோ கொலைகாரன். 1978 ஆம் ஆண்டில் இருந்து பல பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொன்றிருக்கிறான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இரண்டு தடவை தப்பி ஓடி பின்னர் பிடிக்கப்ட்டிருக்கிறான். தான் 28 பெண்களை வல்லுறவலிற்கு உட்படுத்தி கொன்றதாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் அந்த எண்ணிக்கை 100ஐத் தொடும் என்றே கூறப்படுகிறது. இவன் பெண்களைக் கொன்றுவிட்டு பிணங்களுடனும் செக்ஸ் வைத்திருக்கிறான். இவன் 1989 ஆம் தனது 43ஆவது வயதில் ஆண்டு மின்சாரக் கதிரை  தண்டனை்க்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான்....

James Earl Ray


கடைகளில் திருடுதல், மெயில் பிராட் என்று சிறுதாக தொடங்கிய தன் குற்றத்தை ஏப்ரல் 4, 1968 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூாதர்கிங்கைக் கொன்றதன் மூலம் அமெரிக்காவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியானான். பின்னர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு 99 வருட தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தனது 70வது வயதில் ஹெபடைட்டிஸ் நோயால் 1998ஆம் ஆண்டு இறந்துபோனான்.

Ruth Eisemann-Schier

 

 FBI ஆல் தேடப்பட்ட முதல் பெண்குற்றவாளியாக பட்டியலில் சேர்க்கப்பட்டார். தனது 26வது வயதில் கல்லூாரயில் படிக்கும் போது இவரும் இவரது காதலரும் Barbara Jane Mackle என்ற 20 வயது  செல்வந்த வீட்டு கல்லூரி மாணவியைக் கடத்தி கப்பம் கேட்டார்கள். பின்னர் அந்த கல்லூாரி மாணவி நிலத்தில் இருந்து 1 1/2 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெட்டியில் பத்திரமாக மீட்கப்பட்டார். இவரது காதலர் கிரிஷ்ட் கொஞ்ச நாட்களில் பொலிஸாரால் சிறைபிடிக்கப்பட்டார். இவர் 2 மாதங்கள் தலைமறைவு வாழ்கை வாழந்து பின் சரணடைந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு தன் காதலரின் தூண்டுகோலால்லால் தான் இதை செய்ததாகவும் கூறியிருக்கிறார். சில வருடங்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து பின்னர் ஹொண்டோரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்.

 

Daniel Andreas San Diego


தீவிரவாத பட்டியலில் சேர்ந்த முதல் அமெரிக்கன் என்ற பெருமை இவனையே சாரும். ஏப்ரல் 2009 சான் பிரான்ஸிஸ்கோவில் இரண்டு கட்டிடங்களுக்கு குண்டு வைத்து தகர்த்தான். இன்னமும் தேடப்பட்ட்டு வருகிறான்.

James "Whitey" Bulger

 

 அமெரிக்கா பில்லா... கடத்தல், கொலை,  ஹவாலா போன்ற வழக்குகளிற்காக தேடப்பட்டு வருகிறான். ஒசாமாவிற்கு அடுத்ததாக தேடப்பட்டு வருகிறான்.  அதிக வயதில் தேடப்பட்டு வருகிறான்(1999ம் ஆண்டு 69 வயது) என்ற பெருமை இவனையே சாரும் . இவனது தலைக்கு 2 மில்லியன் ரூபா விதிக்கப்பட்டுள்ளது.

Juan Garcia Abrego


போதைப்பொருள் கடத்தல் மன்னன்... மெக்‌ஸிகோவிலிருந்து 15 டான் கொக்கையின் கடத்தியுள்ளான். அமெரிக்காவால் தேடப்பட்டவருபவர்கள் பட்டியலில் 1995 ஆண்டில் இடம்பெற்ற முதலாவது போதைக்கடத்தல் மன்னன்.  1996ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு 11 ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளான்.

நன்றி :- Time.com..



Sunday, May 1, 2011

ஓசாமா கொலை.. முடிவற்ற பயணம்...




உலகத்தின் மிகவும் பலமும் பயங்கரமும் மிக்க ஒசாமா பின்லேடனை தாங்கள் கொன்றுவிட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் "..இதுவரை அல்குவைதா இயக்கத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் மிகவும் முக்கியமான வெற்றி.."


அவர் மேலும் கூறுகையில் "..இஸ்லாமாபாடிற்கு வடக்கே அபொட்டாபாட் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க இராணுவம் குழுக்களாக சென்று தாக்கி கொன்று. அவரது உடலையும் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.."

இந்த தாக்குதலிற்கான வீடியோ ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.  இதை வௌ்ளை மாளிகைக்கு வெளியில் நின்று பாரத்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

ஏற்கனவே பலமுறை பின் லேடனைத் தாங்கள் கொன்று விட்டதாக அமெரிக்கா கூறிவந்தது உண்மை. அவ்வாறு கூறி கொஞ்ச நாட்களில் ஒசாமாவிடமிருந்து டேப் வருவதும் வாடிக்கை . இந்த முறை என்னவோ தெரியவில்லை. ஆனால் அவ்வாறு உண்மையில் கொன்றிருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் அமெரிக்கா மார்தட்டி கொள்வதற்கு ஒன்றுமில்லை. பின்லேடன் ஏற்கனவே கிட்னி பிரச்சினையில் உடல் நலக்குறைவில் அவதிப்பட்டிருந்தான்.

சோவியத் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்மவன்தான் இந்த பின்லேடன். வளர்தத கடா மார்பில் பாய்ந்த கதை இதற்குத்தான் நன்றாக பொருந்தும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து மற்றைய நாடுகளை சுரண்ட ஆரம்பித்தது. இதை எதிர்க்க பின் லேடன் பயங்கரமான செயல்களை செய்துள்ளான். பல அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்தான்.  ஆனால் அதற்கு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தும் அதற்கு சளைத்ததில்லை எனபது உண்மை.


மீண்டும் எத்தனையோ பின்லேடன் உருவாகலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கலாம். அல்கைதா விடுதலைப்புலிகளைப்போல ஒரு நாட்டில் மட்டும் நின்று போராடிய இயக்கம் இல்லை. அமெரிக்க ஏகாதிபபத்தியம் இருக்கும் வரை பின்லேடன்கள் இருப்பார்கள்.