மக்கள் வணங்கும்
'சாமியார்' அவன்..
மாக்கள் அவர்களிற்கு
சாமி யாரென காட்டிட..
பரம்பொருள் அவனது
மகிமை பாடிட
பேரின்பப் பேருரை
புனைந்திட விரைந்தான்
எண்குணங் கொண்டு
மூவுலகம் கொள்ளும்
பரிணாமம் கடந்தவன்
உண்மை பாடிட
மும்மலங்களால் கட்டுண்டு
மானிட பாவம்
தனை நீக்கும் வழியொன்று
காட்டிவிட
பக்கங்கள் நிறைத்துச்சென்றான்
பலவரிகள் கிறுக்கிச் சென்றான்
பாவங்கள் கழுவிச் செல்லும்
பக்தி மார்க்கமொன்றை
உரை எழுதி முடிந்தவுடன்
மானிடப் பதர்தனை
உய்திட சொல்லிடுவேனெ்றான்
இதனை...
இவையனைத்தும் சொல்லிவிடும்
அவன்....
வேசிக்கும் வேண்டாதவன்....
-மோனி..
No comments:
Post a Comment