Sunday, May 1, 2011

ஓசாமா கொலை.. முடிவற்ற பயணம்...




உலகத்தின் மிகவும் பலமும் பயங்கரமும் மிக்க ஒசாமா பின்லேடனை தாங்கள் கொன்றுவிட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் "..இதுவரை அல்குவைதா இயக்கத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் மிகவும் முக்கியமான வெற்றி.."


அவர் மேலும் கூறுகையில் "..இஸ்லாமாபாடிற்கு வடக்கே அபொட்டாபாட் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க இராணுவம் குழுக்களாக சென்று தாக்கி கொன்று. அவரது உடலையும் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.."

இந்த தாக்குதலிற்கான வீடியோ ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.  இதை வௌ்ளை மாளிகைக்கு வெளியில் நின்று பாரத்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

ஏற்கனவே பலமுறை பின் லேடனைத் தாங்கள் கொன்று விட்டதாக அமெரிக்கா கூறிவந்தது உண்மை. அவ்வாறு கூறி கொஞ்ச நாட்களில் ஒசாமாவிடமிருந்து டேப் வருவதும் வாடிக்கை . இந்த முறை என்னவோ தெரியவில்லை. ஆனால் அவ்வாறு உண்மையில் கொன்றிருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் அமெரிக்கா மார்தட்டி கொள்வதற்கு ஒன்றுமில்லை. பின்லேடன் ஏற்கனவே கிட்னி பிரச்சினையில் உடல் நலக்குறைவில் அவதிப்பட்டிருந்தான்.

சோவியத் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்மவன்தான் இந்த பின்லேடன். வளர்தத கடா மார்பில் பாய்ந்த கதை இதற்குத்தான் நன்றாக பொருந்தும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து மற்றைய நாடுகளை சுரண்ட ஆரம்பித்தது. இதை எதிர்க்க பின் லேடன் பயங்கரமான செயல்களை செய்துள்ளான். பல அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்தான்.  ஆனால் அதற்கு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தும் அதற்கு சளைத்ததில்லை எனபது உண்மை.


மீண்டும் எத்தனையோ பின்லேடன் உருவாகலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கலாம். அல்கைதா விடுதலைப்புலிகளைப்போல ஒரு நாட்டில் மட்டும் நின்று போராடிய இயக்கம் இல்லை. அமெரிக்க ஏகாதிபபத்தியம் இருக்கும் வரை பின்லேடன்கள் இருப்பார்கள்.

No comments:

Post a Comment