Sunday, May 1, 2011

கனவாய்ப்போகுமோ என்று...




லையும் உயிர்கள் வாழும்
பூமியிது பெருவெளியாம் - நிலை
குலையும் நாங்கள் வாழும்
வாழ்க்கை ஒரு சிறு சிறையாம்

ருவறை சிறை - போனபின்
கல்லறைசிறை - தோல்வியால்
இலட்சியம் சிறை - வெற்றிக்குப்பின்
அலட்சியம் சிறை - நாமில்
நான் சிறை - பூமிக்கே 
வான் சிறை...


வாழும் பிறப்பிது - ஒரு
முறைதான் - அதில்
உருவாக்கும் சிறைகள்தான்
எத்தனையோ..??

ன்றொரு நாள்
நாமிலொரு நீ போகும் - குடும்ப
வாழக்கையின் துயர்தேடி
நானும் போக விரும்புகிறேன் - தேடாத
வாழ்க்கையின் வேர்தேடி



வாழ்ந்திட துடிக்கிறேன் - தினமொரு
முறை பிறந்திட நினைக்கிறேன் - ஆனால்
நிதமும் பதைக்கிறேன் - கனவென
இவை ஆகுமோயென்று....


-மோனி...





No comments:

Post a Comment