Friday, May 6, 2011

மன்மத தகனம்...(கவிதை)




(ஆத்திகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.. இங்கு கடவுளரை நான் கிண்டல் செய்யவில்லை.. இவை வெறும் குறியீடுகளே..)

தேவலோகத்தில் ஒரே சத்தம்..
வார்த்தைகளின் வாதம்..
காதில் விழுந்த ஓசைகள்
உதட்டில் தெறித்தன..

வழக்கம் போலதான்..
கதை ஒன்று
கதாபாத்திரம் வேறு
யார் பெரியவன் என்ற சண்டை
மன்மதனுக்கும் சிவனுக்கும்

சிவன்..
'உன்னை என் பார்வையில் எரித்தேன்..'
மன்மதன்
'இருந்தும் உம்மை வென்றேன்..'

சாட்சிகள் அழைக்கப்பட்டனர்...

பிரம்மாவும் விஷ்ணுவும் கூண்டேற்றபட்டார்கள்
சாட்சியாக சத்தியம் கூற
'நான் அடியைக் கண்டேன்..'
என்று பிரம்மா
'நானும் முடியைக் கண்டேன்..'
என்று விஷ்ணு

பொய்மையோடு
மன்மதனின் பக்கம் ஓங்கி வந்தது
வாய்மையோடு
சிவனின் பக்கம் தாழ்ந்து சென்றது

இந்திரன் 'சிவன் பிச்சை எடுத்தான்..'
சனி 'நான் அவனை பிடித்தேன்..'
என்றான்..
'இவன் பித்தன்..','பேய்களுடன் ஆடுபவன்..'
குரல்கள் ஒலித்தது...
கோபம் பொறுமையின்
எல்லை கடந்தது...

உண்மையின் வேகம்
சிவனின் கோபமாய்...
நெற்றிக் கண் கனல எரிந்தான்
மன்மதன்..
இந்த முறை மீள முடியாமல்

நிசப்பதம்...
தேவ கூட்டம் கலைந்தது


இனி...
பாவம் உமாதேவியார்...

-மோனி...


No comments:

Post a Comment