Friday, May 6, 2011

சே, அசெஞ்சே.... தயவுசெய்து நிகராக ஒப்பிடாதீர்கள்.




இந்தப் பதிவு பலரது எதிர்க் கருத்துக்களைத தூண்டலாம்.. இது என் தாழ்மையான வேண்டுகோள் மாத்திரமே..

 
அண்மையில் பேஸ்புக்கில் சேயின் முகத்திற்கு ஜீலியன் அசெஞ்சேயின் முகத்தை மோர்ப் செய்து ஒரு புகைப்படத்தைக் கண்டேன்.. (கீழே காட்டப்பட்டுள்ளது..).. இதை உங்களில் பலரே கண்டிருப்பீர்கள்... 

இதை பலர் பகிர்ந்திருந்தது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.. தயவுசெய்து சேயிற்கு நிகராக ஒப்பிடாதீர்கள்.. அது யாராக இருந்தாலும் சரி...

சே குவேரா, இந்த உலகத்தில் இன்னும் எத்தனையோ அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் புரட்சித் தீ, தன் உயிரையே கொடுத்து அடிமைத்தனத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவன், மக்களிற்காள அப்பழுக்கற்ற தலைவன். பிறந்து ஊர் ஆர்ஜென்டீனா ஆனால் கியூபா, கொங்கோ, பொலிவியா என்று சர்வாதிகாரம் மக்களை நசுக்கிக் கொண்டிருந்த இடங்களிற்கு சென்று மக்களிற்காக மக்களோடு நின்று போராடினார். 

இளமையில் துடிப்பும், மனிதத்திற்கான விளிப்பும் கொண்டு மக்களின் விடியலிற்காய் பாடுபட்ட ஒரு தலைவன்.  அவர் நினைத்திருந்தால் ஆர்ஜென்டீனாவில் தன்னுடைய காதலுடன் மருத்துவராக இருந்திருக்கலாம்.  கடைசி கியூபாவில் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் மக்களிற்காக போராடி மண்ணிற்கு விதைக்கப்பட்டான்... சுதந்திரம் என்ற விருட்சம் வளர...

அசெஞ்சே, மேற்கத்தையே ஏகாதிபத்தியத்தின் அதிலும் முக்கியமான உலகத்திற்கே கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் உண்மை வடிவத்தை தோலுரிக்கும் ஒருவன்... விக்கிலீக்ஸ், பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. என்ற கணக்கில் உலக நாடுகளின் தலைவர்களை கட்டுப்படுத்தும் ஒருவன்.. 
அசெஞ்சேயின் செயல் மிகவும் பாராட்டிற்குரியதாகவும்.. அவருடைய துணிச்சலுக்கு சலாம்.. அதற்கு பின்நிற்கவும் நாங்கள் செய்யலாம்.. ஆனால் சேயிற்கு நிகராக இயலாது..
எனது வேண்டுகோள் இதுதான்.. சேயிற்கு நிகராக அவரை மட்டுமல்ல யாரையும் சொல்ல முடியாது.. 

"மாபெரும் ஆன்மா ஒன்று மனிதகுலத்தை ஒன்றுக்கொன்று பகைமையான இரண்டு பகுதிகளாக பிரிக்குமேயானால், நான் மக்களோடுதான் இருப்பேன். அது இந்த இரவில் ஒரு விதியாக எழுதப்பட்டுவிட்டது..."
-சே...


-மோனி..

1 comment:

  1. ///சே குவேரா, இந்த உலகத்தில் இன்னும் எத்தனையோ அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் புரட்சித் தீ,/// ஆமாம் பாஸ் உங்க கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்..

    ReplyDelete