Tuesday, April 26, 2011

என் சிறு கவிதைகள்...





(இது நான் எழுதி சிறு கவிதைகளின் ஒரு சிறு தொகுப்பு...)

கடைக் கண்ணாடிகளில் 
விழுமெம் விம்பத்தை 
இரசிக்கிறோம்...
எம்மை விட 
அதிகமாக...
---------------------------------------------------------------------
பூமியில் உள்ளதாடா சொர்க்கம்
அடக்கி வைத்த மூத்திரத்தை
பெய்து பார் - அப்போது தெரியும்...
---------------------------------------------------------------------

அம்மாவை விடவும்
சொர்க்கமொன்று உண்டென்றால்
எவ்வளவு உன்னதமானது
அது...
---------------------------------------------------------------------
அண்ணாந்து வானம் பாரத்து 
நிம்மதியடைகிறேன் - இன்னமும்
மேலே இடம் உள்ளது...
---------------------------------------------------------------------
'இதுவும் போய்விடும்...' என்றெழும்
கவிஞனும் காசுக்குத்தான்
எழுதுகிறான்.....





No comments:

Post a Comment