Friday, April 15, 2011

என் கவிதைகள்...




என்ன சொன்ன போதிலும் - அதை
                          சொல்ல தகுதியில்லை என்கிறீர்
நீ எப்படிச் அதைச் சொல்வாய் என்றோ
                          ஏளனம் தன்னை பேசுகின்றீர்
முன்னம் செய்ததெல்லாம் - இவன்
                          மறந்துவிட்டான் என்கின்றீர்
பின்னம் செய்யப்போவது இதுவென்று
                          அடித்து உரைக்கின்றீர்
எண்ணம் இவனது சாக்கடை - இவன்
                          எதுக்கும் உதவானென்கின்றீர்
அறிந்ததேனென்றேன் அகம்பாவமென்றீர்
                          அறியவில்லையென்றேன் அறிவிலியென்றீர்
புரிந்தேனனென்றேன் வெறுங்கூச்சலென்றீர்
                          புரியவில்லை என்றால் உட்கூடென்றீர்
நான் சொன்னது என்னைதான்
                        சொல்லுகிறேனென்று புரியவில்லை உமக்கு
சொல்வதை நிறுத்திப் பார்த்தேன் - உம்
                           சொல் 'வதை' முடியவில்லை
நானும் மீண்டும் ஆரம்பித்துவிட்டேன
                           என் வாழ்க்கை எதுவென்றறிந்து.....

-மோனி...



No comments:

Post a Comment