Thursday, March 31, 2011

நானும் 5 star ஹோட்டலுக்கு போயிருந்தேன்....




கண்ணாடியா? தரையா?
ஏழைவிட்டு கண்ணீர்
கழுவியதா....???
வாய்பிளந்து தலைகுனிந்து
முகம் பார்த்து
பெருமூச்சுவிட்டேன்...
"நல்ல காலம் சாரம் கட்டவில்லை.."
என்று...

அமர்ந்தேன், நண்பன் அருகில்
"Good morning sir.."
அண்ணாந்து பார்த்தேன்
சற்றும்ஒட்டாத புன்னகை
அவன் முகத்தில் ஒட்டியிருந்தான்
மட்டை கொடுத்தான்
மடிக்காமல் வாங்கி வாசித்தேன்

சோளக்கூழில் மிளகாய் தேடுபவன்
நகரத்திற்கு வந்து அண்ணாந்ததை போல
புரட்டிப் பார்த்தேன், தலைகீழாய் பார்த்தேன்
புலப்படவில்லை, புரியாமலே
கோழி பெயர் போட்டதை
கோடிட்டு காட்டினேன்

வரும் வரைக்கும் அங்கும் இங்கும்
வாய் பார்த்தேன்
எல்லாரும் மென்று முழுங்கிறார்கள்
எவனும் இரசிக்கவில்லை
"புசிக்க இரசிக்க மறந்த மனிதன்
மரித்தே வாழ்கிறான்.."
இவர்களுக்கு
இரங்கல் அறிக்கை
இரைந்து கொண்டிரருக்க

பளிச்சிடும் பாத்திரத்தில்
பரிமாறினான்
இரும்பு இரண்டு கொடுத்தான்
இருகை நீட்டி வாங்கினேன்
கைபிசைந்து சாப்பாட்டை
கைமா பண்ணணி சாப்பிடுவதில்
உள்ள சுகம் இவ் வையத்தில்
உளதோ... ?? என்றெண்ணி
கொடுத்த இரும்பை கடாசிவிட்ட
கொண்டு வந்த சாப்பாட்டில் கை வைத்தேன்
அருகில் இருநத்தவன்
அவன் கிட்னியை யாரோ
திருடியது போல என்னை
தின்று பார்த்தான்

சாப்பாட்டை
கடித்தேன் கரைந்து
உறிஞ்சினேன் உருகியது
உப்பில்லை உறைப்பில்லை
ஒடியற் கூழ் குடித்தால்
ஓடி வருமாம் ஆனந்த கண்ணீர்
எனக்கும் வந்த்து கண்ணீர்
என் நிலை எண்ணி வந்த துக்க கண்ணீர்

மென்று தின்று
முக்கி முனகி
சாப்பிட்டு முடித்து
சற்றே வெளியே வந்து

எனக்குள்
சிலாகித்தேன்
"அம்மா உன் கருவாட்டு
குழம்பும் புட்டும்
ஒரு கோடி தேறும்...."

-மோனி...


No comments:

Post a Comment