Sunday, June 26, 2011

ஒரு பருந்தும்... பல காகங்களும்...




கதிரவன் எல்லையில் மேலெழ
காக்கைக் கூட்டமொன்று நகர்கிறது
தனியே தன் கூட்டிலிருந்த பருந்தொன்றை
திட்டமிட்டு தாக்குகிறது..

பருந்து இதை எதிர்பார்திருந்தது - ஆனால்
இந்த தனிமையை இல்லை
புரியாத மொழி பேசும் காக்கைகளுடன்
தன் மொழி பேசும் காக்கைகளும் கண்டு
திகைத்து நின்றது - புன்முறுவலுடன்
கருங்காக்கைகளுடன் - ஓரத்தில்
பல வௌ்ளைக் காகங்களும் நின்றது
கண்டு புரிந்த நின்றது - பருந்து

எண்ணிக்கையில், பலத்தில் மேலெழுந்த
காக்கைக்கூட்டத்தின் முன்
பருநதின் நிலை தோல்வியை நோக்கியது..
கொண்டு குணமும் - கொதிக்கும் இரத்தமும்
கொண்ட பருந்து - அன்று
நில்லாமல் போராடியது - தம்
எண்ணிக்கைக்கு எட்டமுடியாத
காக்கைகளை விரட்ட முற்பட்டது..

தன்னைக் காக்க தன் சகோதரர்
வருவர் என்று தனித்திருந்தது
பாவம் அன்று தெரியவில்லை - தன்
சகோதரர் என்றிருந்தது - பருந்துகளல்ல
நரிகள் என்று..

பருந்தின் இறக்கை தாக்கப்படுகிறது
மூர்க்கத்னத் தாக்குதலில்
கண்பறிக்கப்படுகிறது
போராடியது - விடாமல்
போராடியது...
வீரம் உதிரச் சொத்து அதற்கு

இறுதியில் பருந்து வீழ்த்தப்படுகிறது
தோற்றம் சிதைக்கப்படுகிறது.....
வீரவெற்றி பெற்றதாக கரைந்துகொண்டே
காகங்கள் பறந்து செல்கின்றன

முடிவில்..
பருந்தின் சிதையாத
கூட்டிலிருந்து சில பருந்துக் குஞ்சுகள்
கண் திறக்கின்றன....

-மோனி..




No comments:

Post a Comment