Sunday, June 19, 2011

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??




யாரோ கூப்பிடும் குரல் கேட்டு
விழித்துக் கொண்டேன்

அரை நித்திரையிலிருந்து
யாரோ என்னை கூப்பிடவதுபோலிருந்தால்
விழித்துக்கொண்டேன்

அபயத்தின், வலியின்,
மரணத்தின், கோபத்தின்
அழைப்பின் குரலது..

குரலின் சொந்தம் தேடி
ஊரும் இடமும் தேடினான்
யாரும் புலப்படவில்லை

மீண்டும் புரண்டு புரண்டு படுத்தேன்
அதே குரல் மீண்டும் கேட்டு
மீண்டும் விளித்துனக்கொண்டனே்..

புரிகிறது, அந்த குரல்
வெளியிருந்தல்ல - என் உள்ளிருந்து
கேட்கிறது..

தமிழா...!! உனக்கிந்த குரல் கேட்கவில்லையா...??

-மோனி..


1 comment: