Monday, July 11, 2011
வேசிக்கும் வேண்டாதவன்...
மக்கள் வணங்கும்
'சாமியார்' அவன்..
மாக்கள் அவர்களிற்கு
சாமி யாரென காட்டிட..
பரம்பொருள் அவனது
மகிமை பாடிட
பேரின்பப் பேருரை
புனைந்திட விரைந்தான்
எண்குணங் கொண்டு
மூவுலகம் கொள்ளும்
பரிணாமம் கடந்தவன்
உண்மை பாடிட
மும்மலங்களால் கட்டுண்டு
மானிட பாவம்
தனை நீக்கும் வழியொன்று
காட்டிவிட
பக்கங்கள் நிறைத்துச்சென்றான்
பலவரிகள் கிறுக்கிச் சென்றான்
பாவங்கள் கழுவிச் செல்லும்
பக்தி மார்க்கமொன்றை
உரை எழுதி முடிந்தவுடன்
மானிடப் பதர்தனை
உய்திட சொல்லிடுவேனெ்றான்
இதனை...
இவையனைத்தும் சொல்லிவிடும்
அவன்....
வேசிக்கும் வேண்டாதவன்....
-மோனி..
Friday, July 1, 2011
வவுனியாவில் நடை பெறவுள்ள Carnivelஐ புறக்கணிப்போம்....
இந்தப் பதிவு ஒரு வவுனியாவை(இலங்கை) சேர்ந்த நண்பர்களுக்கொரு கோரிக்கை...
வவுனியாவில் வழமைபோல இந்த மாதமும் வருகிற கிழமை Carnivel களியாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதற்கான அடுக்குப்படிகளும் தற்போது ஆரம்பித்துவிட்டது.... என்னுடைய கோரிக்கை இதை வவுனியா வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்...


இவர்களின் தேவைகளைத்தான் எங்களால் பூர்த்தி செய்யமுடியவில்லை, இவர்கள் கண்ணீர் விடும் போது நாங்கள் அதற்கு அமைதியாய் செவிமடுத்து ஆறுதல் கூறாவிட்டாலும் பரவாயில்லை.. இவர்கள் கண்ணீருக்கு மதிப்பளித்து அவர்களுக்கு எங்கள் அமைதிகளை பரிசளிப்போம்..
இந்தியாவிலே எங்கள் சகோதரர்கள் எங்களிற்காய் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்...
நான் அங்கே போனால் என்ன...?? குடியா முழுகவிடப்போகிறது என்று நினைக்கும் சகோதரர்களே... இதே போன்ற நிலையை ஓர் நாள் எங்களுக்கும் வரலாம்.. அப்போது எங்களுக்காய் கண்ணீர்விட உறவுகள் வேண்டும்...
இல்லை நாங்கள் போவோம் என்று நீங்கள் எண்ணினால்.. நிச்சயமாக தமிழ் அன்னை உங்களை வாழ்த்தி அனுப்புவாள்..
இந்த கருத்தை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை அல்லது இந்தப் பதிவு தனிமனித சுதந்திரத்தை மீறியது என்று நீங்கள் கருதினால்... தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்...
Subscribe to:
Posts (Atom)